முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கரிக்குழம்பு

விடியங்காலையே எழுந்து மேய்த்த ஆட்டின் கழுத்தறுத்து மேனி உரிக்க தொங்கவிட்டு அது அதுவாய் அறுக்க ஆட்கள் வந்துவிட்டனர்.. தூக்குசட்டியை கணம்பிடித்து வாங்கிப் போன கரித்துண்டுகளில் ஈரலும்,தலைக்கறியும் ஆடிப்பெருக்குக்கு இணாமாம்... ஆட்டுரலில் வளையலிசையோடு நசுங்கிய அந்தந்த சில்லுகளை கொட்டிக் கவுத்தி உலைச்சந்தில் ஒடித்த விறகு திணித்து மிதக்கும் கொலுப்பை கிழறிவிட்டு மொக்கை தோட்டத்து வாழைஇலையில் குமித்து வைத்த ரேசன் சோறில் ஊற்றிய கறிக்குழம்பை தவிர வேறென்ன வேண்டும் ஜென்மத்தில்...

ஒக்கலிகர் வரலாறு

                                  ஒக்கலிகர் வரலாற்றை பற்றி நாம் புரட்டி பார்த்தோம் அதில் திராவிடர்கள் எனவே பெரிதும் குறிப்பிடப்பட்டுள்ளது.அதன்படி கன்னடம்,தெலுங்கு,மலையாளம்,தமிழ் இப்படி மொழியால் பிரிந்திருந்தாலும் அவர்கள் திராவிடர்கள் எனும் பெரிய கலாச்சாரத்தை பின்பற்றியிருக்கிறார்கள். ஒக்கலிகர் என்றால் உழுபவர்கள் அல்லது விவசாயிகள் என பொருள்.ஒக்கலிகர் எனும் சொல் கிரேக்கத்திலிருந்து வந்தது என்பது தான் நிஜம்.மனித சாம்ராஜ்யத்தில் சந்திர குப்தனுக்கு முன் ஆண்ட கிரேக்கர்கள் மக்களின் தொழிலுக்கு ஏற்றவாறு பெயர் வைத்திருக்கிறார்கள். இவர்கள் முதலில் கர்நாடக மாநிலத்தில் வாழ்ந்தவர்கள்.கவுடாஸ் என அழைக்கபடுபவர்கள்.அதிகமாக மைசூரை ஒட்டி உள்ள ஊர்களில் குடியிருந்தர்கள்.முகலாயர் ஆட்சி தொடங்கியிருந்த காலகட்டத்தில் அவர்கள் கவுடர் குலத்துப் பெண்களை மணந்துகொள்ள விரும்புவதாகவும்,வற்புறுத்தி பெண்களை கடத்தி சென்றதாகவும் கூறப்படுகிறது.அதனால் பயந்த அம் மக்கள் கூட்டம் கூட்டமாக பல மாநிலங்களுக்கு  இடம் பெயர்ந்தனர்.அதில் தமிழ...

நாகக்கயிறு

டவுசர் புற்றிலிருந்து உருவிய தலைசிதறிய நாகத்தின் நுனியை அந்த மரப்பிரமீடில் வைத்து கட்டைவிரலால் தலை நெறுக்கிப்பிடித்து இறுகச் சுற்றிக்கட்டி வாலை சுண்டுவிரல...

கவிதை -பகத்சிங்

ஜாலியன் வாலாபாத்தின் ரத்த மண்ணை என் கைகளால் நான் சுமந்திருக்கலாம்.. பால்யத்தில் மார்க்சிய மாத்திரைகளை முழுங்கி வளர்ந்திருக்கலாம்... எங்கள் தெருவில் துரைமார்களி...

புணர்குறி

<#> நகத்தின் சிறிய சந்தில் நுழைக்கபட்ட ஊசியாய் இலக்கண மற்ற புணரில் அவளின் யோனிமொட்டில்  தடுத்தல்களை எரித்து தயையின்றி  நுழையும் அந்த பெருத்த அம்பு நகப்பிராண்டல...

பெரி யார் ஏன் கடவுள் எதிர்ப்பாளர் ஆனார் ?

     பெரியாரை வெறும் கடவுள் எதிர்பாளாராகத்தான் இங்கு பெரும்பாலானோர் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.அதனால் சில மதவாதிகள் அவரை ஏளனமாக பேசுகிறார்கள்.அதற்கெல்லாம் அவர் அஞ்சியவரும் இல்லை.ஈரோட்டில் நல்ல குலத்தில் பிறந்து தன் பால்யத்தில்   நடந்த சில சாதிய தீண்டாமை கொடுமைகளை எதிர்த்து போராட துவங்கிய நீள்தாடி காரர் அவர்.உலக தத்துவாதிகளை படித்த பகுத்தறிவு பெற்ற எவன் என்ன சொன்னாலும் தான் செய்வதை செய்து கொண்டிருந்தவர்.அவரின் பெண் ஏன் அடிமையானாள் எனும் நூலை வாசித்திருந்தால் பெண்களின் மீதான ஆண்களின் புரிதலை உணர முடியும்.அந்த நூல் தமிழுக்கு பெரும் வர பிரசாதம் எனக்கூட சொல்லலாம்.வைக்கம் போராட்டத்தில் தனக்கான தீண்டாமை கொள்கையை முன்னிறுத்தி செயல்பட்டவர்.அவர் பேசும் போதும் "வெங்காயம்" என்ற வார்த்தையும்,எழுதும் போதும் "நிற்க" என்ற வார்த்தையும் அதிகம் உபயோகிப்பதுண்டு.தாழ்த்தப்பட்ட மனுதனுக்காக தன் சிந்தனையை உழைப்பை தூவியதால் மனிதனை உயர்த்தும் ஜென்மமாக இருப்பதால் அவரை பெரியார் என்கிறோம்.தான் வாழ்வின் கடைசி காலத்தில் மூத்திர பையை சுமந்து மேடையில் பேசி பாவப்பட்ட ஜீவன்களுக்காக போராடி...

கவிதை

உங்களை போல எனக்கும் இன்னொரு என் உண்டு.. கோர வதனம் அதனின் இயல்பு… சரீரத்தின் அசைவுகளை வழி மாற்றும் உத்தி அதற்குண்டு… விழிகளின் 180 யை 360 ஆக சுழற்றிவிட்டு சிலாகிக்கும் .. ...

குற்றமும் தண்டனையும்

            குற்றமும் தண்டனையும் மனிதனின் அக மனதை சோதித்து பார்க்கும் ஒரு நாவல்.ரஷ்யாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் தஸ்கோயோவஸ்கி எழுதியது.சுமார் 600 பக்கங்ஙளை கொண்ட இந்த பெரிய நாவலை நான் படிக்க ஐந்து நாளாயிற்று. கதையின் நாயகன் ரஸ்கொல்நிகோவ் சாதாரண குடும்பத்தில் பிறந்தவன்.       படிப்புக்காக பீட்டர்ஸ்பெர்க் நகரில் தங்கி இருப்பவன்.குடும்ப சூழ்நிலை காரணமாக அவன் படிப்பு தடைகிறது.தனது சுய செலவுக்காக அவனின் உடைமைகளை அடகு வைக்கிறான்.அப்படி அவன் அந்த செயலை செய்யும் அடகுபொருளை வாங்கி வைக்கும் நாசகார கிழவியை அவனுக்கு பிடிக்கவில்லை.மேலும் அங்கு உள்ள பொருளை அவன் திருட வேண்டுமென தோன்றுகிறது.திடிரென ஒரு நாள் அந்த கிழவியை கோடாரியால் கொன்றுவிட்டு மேலும் உடனிருந்த கிழவியின் அப்பாவி தங்கையும் கொன்று நகையை எடுத்து தப்பிக்கிறான்.இந்த கொலைக்கு பின்பான அவன் மனநிலை,தான் செய்தது சரி தான் என அவனுக்குள் அவன் உருவாக்கி வைத்திருக்கும் கொள்கை மேலும் எப்படி இவர்களிடமிருந்து தப்பிப்பது என்பது பற்றிய பல குழம்பிய சிந்தனையோடு மனதை துன்புறுத்திக்கொள்ளும் நாயகனின் கதை ...

சவக்கிடங்கு

பெய் ரூட்டில் நடந்த துப்பாக்கிகளின் இரை பிணங்களவை.. சவ கிடங்கு காவலனின் கால்களெல்லாம் ரத்தம்.. சவ குழிகள் நிறைந்த ஏக்கத்தில் இடமில்லை என்றான் இறுதி சடங்கன்.. ஒரு பிணம் "நான் இஸ்லாம் பிணம்   மந்திரியின் மகனும் கூட   எனக்கே இடமென்றது.. ஒரு பிணம்    "நான் யூதப் பிணம்      உயர் குலத்தோனுக்கு     இடமில்லையா??? ஒரு பிணம்     "நான் கிருத்துவ பிணம்       மெய்படி நானே      உகந்தோனென்றது… ஒரு பிணம்      " நான் அமைச்சரின்        அண்ணன் பதவி       பத்தரம் என்றது.. உடனே அப்பிண்டத்திற்கு சகல நெறியோடு அடக்கம்.. ஏனோ அது அரசாங்க சவகிடங்காம்….      

இந்திய விவசாயத்தின் வரலாறு

விவசாயத்தின் வரலாறு "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்’          விவசாயம் மனித ஜீவிகள் மொத்தமும் இதனை சார்ந்து வாழவேண்டிய கட்டாயத்தில் தான் இருக்கிறது.உயிரினம் பிறந்த முதலில் இருந்தே ஏதோ ஒரு விளைச்சல்களை நம்பி தான் இருந்திருக்கிறது.இதை இந்த காலத்தவர் உணர்ந்தார்கள் என்பது தான் கேள்வி குறியாகவே உள்ளது.          மனிதன் பூமியில் தோன்றிய காலத்திலிருந்தே உணவு,உடை,இருப்பிடம் ஏதோ ஒன்றை சார்ந்து வாழ வேண்டிய கட்டாயத்தில் தான் இருந்தது.அதை வைத்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மூன்று பிரிவாக பிரிக்கிறார்கள். கற்காலம்           இந்த காலத்தில் ஆதி மனிதன் காடும்,அதன் சார்ந்த வாழ்வொன்றை வாழ்ந்து வந்தான்.அவனின் அன்றாட தேவைக்கான உணவை வேட்டையாடியோ அல்லது காடுகளிலிருந்தோ எடுத்து கொண்டான்.அந்த கால கட்டத்தில் இயற்கையே கதியென பசுமையோடு கொஞ்சு குத்தாட்டம் போட்டுகொண்டான்.அவனுக்கென எந்த வித மனப்பாகுபாடுமில்லை.நீ உயர்ந்தவன் நான் உயர்ந்தவன் எனும் பேசிக...

புள்ளி

குள நீரின் மேனியொட்டி காற்றுத் தரையில் பரபரப்பாக தும்பி வரையும் கோலத்திற்கு புள்ளியுமில்லை உருவகமுமில்லை மதிப்பெண் கேட்கிறது எப்படி தருவேன் நான்???

நிசப்தம்

அந்த தூயஇருட்டில் நிசப்த்தை பார்த்து பேச ஒரு வாய்ப்பு மொழி கொஞ்சம் விளங்கவில்லை… ஏதோ சலசலப்பு இலக்கணம்.. கூசும் பாசை போலிருக்கிறது... ஆனால் கொஞ்சம் புலப்படுகிறது...

பூனாச்சி புத்தக விமர்சனம்

பூனாச்சி ஒரு வெள்ளாட்டின் கதை அதை நான் பேசித்தான் ஆக வேண்டும்.ஆம் அந்த கதையை எழுதிய பெருமாள் முருகன் ஐய்யாவுக்கு கோடி கும்புடு. மனுசேன் அணுவணுவா ஆடுகளையும் ஆட்டு மந்தையும் கவனுச்சு எழுதிருக்கார்.மேலும் முக்கியமான விசயம் ஆடைகளுக்கு பெயரெல்லாம் வைத்து ஒரு ஆவணத்தை உருவாக்கியுள்ளார் என சொல்லலாம். மந்தையில் ஆடோட்டி சொல்பவர்களிலிருந்து,அதன் புணர்ச்சி முறைகளில் இருந்து ,ஆட்டுக்கு உடை அடைப்பவனுக்கும் இடையான மனிதத்தை அவர்களின் வாழ்வு முறையையும் ஒரு கிராமத்தானாய் இருந்தும் நான் தெரிந்து கொள்ளாதவையை எழுத்தாளர் எனக்கு சொல்லி தந்தார் எனக்கூட சொல்லலாம்.

தீரன் சின்னமலை வாழ்க்கை வரலாறு

இன்றைய ஈரோடு மாவட்டத்தில்காங்கயம் வட்டம் சென்னிமலைஅருகிலுள்ள செ.மேலப்பாளையம்என்னும் சிற்றூரில் ஏப்ரல் 17, 1756 அன்று பிறந்தவர்.அவரின் தந்தையார் பெயர் ரத்னசாமி கவுண்டர்(பயிரன் கூட்டம்), தாயார் பெயர் பெரியாத்தா (ஓதாலன் கூட்டம்). இவரின் இயற்பெயர் தீர்த்தகிரி கவுண்டர். இவர் பழைய கோட்டைப் பட்டக்காரர் மரபு என்று கூற படுகிறது. இதனால் இவர் இளம்பருவத்தில் தீர்த்தகிரிச் சர்க்கரை எனப் பெயர் பெற்றார். தீர்த்தகிரி இளவயதிலேயே மல்யுத்தம், தடிவரிசை, வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம் போன்ற போர்ப் பயிற்சியை சிவந்தாரையர் என்பார் வழிவந்தவரிடம் கற்றுத் தேர்ந்தார்.கொங்கு நாடு அப்பொழுது மைசூரார் ஆட்சியில் இருந்ததால், கொங்கு நாட்டு வரிப்பணம் சங்ககிரிவழியாக மைசூர் அரசுக்குச் சென்றது. ஒருநாள் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி மைசூர் அரசுக்குச் செல்லும் வரிப்பணத்தைப் பிடுங்கி ஏழைகட்கு விநியோகித்தார். அப்பொழுது, வரி கொண்டு சென்ற வரி தண்டல்காரரிடம் சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல் என்று சொல்லி அனுப்பினார். அதுமுதல் தீர்த்தகிரிக்குச் சின்னமலை என்ற பெயர் வழங்கலாயிற்று என்ற கரு...

மாலையும் கழுத்தும் _சிறுகதை

             அடுத்தவன் வீட்டில் அடிதடி என்றால் வேடிக்கை பார்த்து ரசிப்பது அந்த ஊர் காரர்களின் பொழுதுபோக்காயிற்று.         அப்படித்தான் ராகவன் வீட்டிலும் ஒன்று நடந்துகொண்டிருந்தது.ராகவன் அப்பா அவனின் துணி மணிகளை தூக்கி வெளியே வீசிக் கொண்டிருந்தார்.   "எவளடா…இழுத்துக்கு வந்து நிக்கிற???பன்னி மேக்கிறவன் மகளாம் எனக்கு மருமகளா??? வெக்காளி ஒழுக்கா ஓடிப்பொயிரு ஏன் மானத்தை வாங்கமா…."கணத்த கோபத்தோடு இப்படி பேசிச்கொண்டே இருக்க ராகவனும் அவனின் காதலியும் தலையை தொங்க போட்டு நின்றிருந்தார்கள்.     கூட்டத்தில் ஒரு பெருசு…"கூப்பிட்டு வாரவேன் காலகாலத்தில வர வேணாமா…இன்னேரத்தில வந்து தூக்கத்தை கெடுக்குறானே…"     "யோவ் மொக்க…உனக்கெல்லாம் வயசாச்சுனு தே பேரு…பெரிய மனுசானா போய் பஞ்சாயத்தை முடிச்சு விடுயா என இன்னோருவன் சொல்ல…"     "அடியேய் …சுளி மகனே..நீயும் அவன் கூட்டாளி தானாட…கோளாற அந்த புள்ளையை சேத்துவிட்டுட்டு இங்க வந்து ஒன்னும் தெரியாதவனாட்டம் நிக்கிறியா…இ...

சோழ வரலாறு 2

சோழ வம்சத்தில் பாராந்தகனுக்கு பிறகு சுந்தர சோழன் ஆட்சிக்கு வந்தார்.சுந்தர சோழனின் இரண்டு மனைவிகளில் முதல் மனைவிக்கு பிறந்தவன் ஆதித்தகரிகாலன்,இரண்டாவது மனைவிக்கு பிறந்தவர்கள் குந்தகை,அருள்மொழி வர்மன்.நான் முன்னரே சொன்னது போல் இப்போது சோழவம்சத்தை ஆளுவது சுந்தர சோழன்.சுந்தர சோழன் நல் சிவபக்தி உடையவர். அவர் பாண்டிய நாட்டை எதிர்த்து போரிட வேண்டுமென நினைப்பது மட்டும் தான் அவர் வேலை.மத்தபடி எல்லா வேலைகளையும் ஆதித்த கரிகாலன் பாத்துகொள்வான்.போர்களத்தில் இறங்கிவிட்டால் தீரனாக மாறி விடுவான்.வெறிகொண்டு எதிரியை தாக்குவான்.ஒரு முறை பாண்டிய மன்னனை கொன்று அவன் தலையை பழையூரின் கோபுரத்திற்கு முன்பே இருந்த மரத்தில் தொங்கவிட்டார்.அப்படிப்பட்ட வீரனை சில சூட்சம கிருமிகள் கோழைத்தனமாக கொன்றிருக்கிறார்கள்.சதியின் கொடூரம் யாரை விட்டது. தன் வீர மகன் இறப்பை எண்ணி எண்ணி வருந்திய உத்தமசோழனும் கொஞ்ச நாளில் உயிரிழந்தார்.அவரின் இறப்புக்கு பின் சோழ வம்சத்தின் மாபெரும் கதாநாயகன் அருண்மொழி வர்மனெனும் ராஜராஜ சோழன் அரசனானார். அப்போதே சோழவம்சத்திற்கு பொற்காலம் பிறந்துவிட்டது.சிறு வயதிலையே புராணத்தையும் போர் கலையையும் நன்...

சோழ வரலாறு 1

எனக்கு கல்லூரி காலத்திலிருந்தே தமிழர்களின் பண்டைய வரலாறை தெரிந்து கொள்ள வேண்டுமென எப்போதும் ஆர்வமுண்டு.அப்படி தொட்டு தொட்டு நான் படித்து பூரித்து போன பலமன்னர்கள் உள்ளார்கள்.அதில் சோழ வரலாறு என்பது விதி விலக்கா என்ன???தமிழினமே…. மன்னிக்கவும் உலகமே படித்து தெரிந்து கொள்ள வேண்டிய பெரிய சாம்ராஜ்யம் அது.இந்தியாவின் பல்வேறு பகுதியையும் ஆண்ட அவர்களின் ஆட்சிமுறையை பற்றி படிக்கும் போதே இனிக்கிறது.அப்படி எனக்கு தெரிந்த நான் படித்த புத்தகத்தின் மூலமாக ஜெயமோகன் போன்றவர்கள் எழுதிய கட்டுரைகள் மூலமாகவும் தெரிந்து கொண்ட சில துகள்களை உங்களோடு பகிர ஆசைப்படுகிறேன். சோழர்கள் வம்சம் கி. பி ஆண்டுகளுக்கு முன்னறே சோழவம்சம் இருந்ததாக கருதப்படுகிறதுஆனால் அதற்கு சரியான சான்றுகளில்லை.9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சோழ மன்னன் கரிகால சோழனின் வரலாறுகளே நமக்கு கிடைத்துள்ளது. முதன் முதலில் காவேரி ஆற்றுப்பாய்ச்சலை அடைத்து கல்லணையை கட்டி இன்றும் உலகம் போற்றும் வகையில் அணைகட்டுமான பணிக்கு முன்னோடியா திகழ்கிறார் கரிகாலச்சோழன்.சேர நாட்டையும்,பாண்டிய நாட்டையும் ஒரு காலத்தில் தனது படை...

செயற்கை உரங்களால் சீரழியும் புண்ணிய பூமி

இங்கே நாம் விவசாயம் செய்து கொண்டிருக்கிறோம்.இந்த உலகத்தின் அவசரநேரத்தில் விவசாயமும் அவசரமாய்  வருமானம் பார்க்கவே இந்த காலத்து விவசாயிகள் எண்ணுவதுண்டு. அது அவர்களின் ஆசைஅல்ல அந்த நிலைமைக்கு தள்ளபட்டுள்ளனர் என்பதே உண்மை.பூச்சிகள் செடிகளை தாக்குவதனால் உண்டாகும் பிரச்சனையைதடுக்கவே செயற்கை மருந்துகள் உருவாக்கப்பட்டது. ஆனால் இன்று அதுவே விவசாயத்தை தன் கட்டுபாட்டுக்குள் வைக்கும்அளவிற்கு வளர்ந்துள்ளது.செடி வளர மருந்து,காய் கனிக்க மருந்து,பூ அதிகமாய் விட மருந்து,இதில் இலையை தாக்கும் நோய்க்குமருந்து,களையெடுக்க கூட சோம்பல்தனப்பட்டு மண்ணின் வளத்தை கெடுக்கும் களை கொல்லி மருந்து. இன்னும் எத்தனையோவகைகளால் வெறும் ரசாயனத்தை வைத்தே செய்யும் விவசாயத்தில் விளையும் க...

கோயில்கள் எதற்காக????

           கோயில்கள் பற்றி எனக்கு எப்போதும் நிறைய சந்தேகங்கள் இருந்ததுண்டு . ஏனென்றால் நான் அவ்வளவாக கோவிலுக்கு போக விரும்பாதவன் தான் . மன்னர்கள் ஏன் இவ்வளவு கோவில்களை கட்டி வைத்திருக்கிறார்கள் . எதற்க்கு அந்த கோவில்களுக்கு இவ்வளவு செலவு போன்ற கேள்விகள் எனக்குண்டு . இதோ அதற்கான பதிலை நானே தேடி கொள்ள வேண்டினேன்.ஆம் அப்படி நான் தெரிந்து பூரித்து போன விஷயங்களை பற்றி தான் இன்று உங்களோடு பேச வந்திருக்கிறேன் . கோயிலின் பொருள்      கோயில் என்பதை   இரண்டாக பிரிக்கலாம் . கோ என்றால் மன்னன் , இல் என்றால் இல்லம் மன்னனின் இல்லம் என்பதே பொருள் . கோவில் என்பது வெறும் தெய்வ வழிபாட்டுக்காக நமது முன்னோர்கள் உருவாக்கவில்லை . ஒரு நாட்டின் கலை , அரசியல் , அரசாங்கம் , தானிய சேமிப்பு , அரசபை , சேமிப்பு கிடங்கு , மக்கள் பாதுகாப்பு   எல்லாமே கோவில்கள் தான் . மன்னர்களின் கோயில்                பொதுவாக ஒர...