முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குற்றமும் தண்டனையும்

           Crime and Punishment eBook: Dostoyevsky, Fyodor: Amazon.in: Kindle ...குற்றமும் தண்டனையும் மனிதனின் அக மனதை சோதித்து பார்க்கும் ஒரு நாவல்.ரஷ்யாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் தஸ்கோயோவஸ்கி எழுதியது.சுமார் 600 பக்கங்ஙளை கொண்ட இந்த பெரிய நாவலை நான் படிக்க ஐந்து நாளாயிற்று.

கதையின் நாயகன் ரஸ்கொல்நிகோவ் சாதாரண குடும்பத்தில் பிறந்தவன்.

Dostoevsky's motives behind 'Crime and Punishment' – Eye of Lynx
      படிப்புக்காக பீட்டர்ஸ்பெர்க் நகரில் தங்கி இருப்பவன்.குடும்ப சூழ்நிலை காரணமாக அவன் படிப்பு தடைகிறது.தனது சுய செலவுக்காக அவனின் உடைமைகளை அடகு வைக்கிறான்.அப்படி அவன் அந்த செயலை செய்யும் அடகுபொருளை வாங்கி வைக்கும் நாசகார கிழவியை அவனுக்கு பிடிக்கவில்லை.மேலும் அங்கு உள்ள பொருளை அவன் திருட வேண்டுமென தோன்றுகிறது.திடிரென ஒரு நாள் அந்த கிழவியை கோடாரியால் கொன்றுவிட்டு மேலும் உடனிருந்த கிழவியின் அப்பாவி தங்கையும் கொன்று நகையை எடுத்து தப்பிக்கிறான்.இந்த கொலைக்கு பின்பான அவன் மனநிலை,தான் செய்தது சரி தான் என அவனுக்குள் அவன் உருவாக்கி வைத்திருக்கும் கொள்கை மேலும்
எப்படி இவர்களிடமிருந்து தப்பிப்பது என்பது பற்றிய பல குழம்பிய சிந்தனையோடு மனதை துன்புறுத்திக்கொள்ளும் நாயகனின் கதை தான் இது.இதை கதை என்பதை சொல்வதை விட
குற்றம் செய்பவர்களின் மனதின் உளவியல் ஆராய்ச்சி எனக் கூட சொல்லலாம்.
      ஒரு தீய குணம் கொண்ட பெண்ணை கொன்று விட்டமே அதனால் என்ன தப்பு,நான் சமுகத்திற்கு நல்லது தானே செய்திருக்கிறேன் என ஒரு பக்கம் புலம்பினாலும்,அவனின் மனம் குற்றத்தை மறக்க தவிக்கிறது.மேலும் நாயகனின் தங்கை துனியாவின் காதாப்பாத்திரம் மெய்சிலிர்க்க வைக்கிறது.தனது சகோதரனின் மீது அவள் கொண்டுள்ள அன்பு, ஒரு காம கொடுரனிடமிருந்து தன்னை காப்பாற்றிகொள்ள அந்த சிறுமி படும்பாடு நம்மை கண் கலங்க வைக்கிறது.ஒரு குடிகாரனின் ஊதாரியின் குடும்பத்தில் மகளாக பிறந்த சோனியா தன் அம்மாவையும், உடன் பிறந்தோரையும் காக்க
அவள் விலைமாதுவாய் மாறுவது மேலும் அவள் விலைமாதுவாக இருந்தாலும் பல நல்ல பண்புகளால் திகழ்பவளாக தஸ்கோயோவஸ்கி சித்தரித்திருப்பது நமக்கு மெய்சிலிர்பூட்டுகிறது.
ரஸ்கொல்நிகொவ் தனது சிறிய அறையில் தன்னை தானே வருத்திக்கொள்ளும் அகப்போராட்டம் நம்மை பதட்டமடைய செய்கிறது.
குற்றம் செய்யப்படுகிறது சூழ்நிலையை சார்ந்தது.

      உலகில் நல்லவர்கள் கெட்டவர்கள் என சொல்வதெல்லாம் வெறும் வேம் என நிறுபிக்கிறார்.மேலும் சாதாரணமாணவன் வேடிக்கை பார்ப்பவன்.எதையும் செய்ய துணிபவனே அது (கொலையாகினும்)அவனே தலைவனாகிறான்.என நெப்போலியனை உதாரணமாக காட்டுகிறார்.எந்த ஒரு கொள்கையும் உணர்வின் முன்பு மாய்ந்துவிடும் என்பதே கதையின் நீதி.பொதுவாக இந்த நாவலில் வரும் பெண் கதாப்பாத்திரங்கள் வாழ்வில் பெண்படும் பாடை சித்தரிக்கிறது.உதாரணமாக சோனியாவின் தாயார் காதாப்பாத்திரம் தனது கணவனை இழந்து அந்த குடும்பத்தை காக்க போராடும் குணமும் சில பைத்தியகாரத்தனமும்,காசநோயால் அவள் அவதிப்பட்டு இறந்து போவதும் வேதனையான நிகழ்வாக இருக்கிறது.
            சோனியாவின் வாழ்வு அவள் காதாநாயகனின் மீது கொள்ளும் காதல் அத்தனையும் வைத்துப்பார்க்கும் போது சமுகத்தில் நாம் யாரை தீயவர்கள் என வெறுக்கிறோமோ அவர்களின் நன்மதிப்பை சுட்டிக்காட்டுகிறது.இந்த புத்தகம் உளவியல் ரிதியாக ஆராய்ச்சி செய்பவர்களுக்கு பெரும் பொக்கிஷம் எனலாம்.மேலும் கதையும் அதை அகமனதில் அமர்ந்து ஒவ்வொரு காதாப்பாத்திரத்தின் மூலம் தஸ்தோயோவெஸ்கி விவரிக்கும் விதமும் ஒரு சிறந்த அனுபவத்தையும்
வாழ்விற்கான வித்யாசமான புரிதலையும் கற்பிக்கிறது.இந்த நாவல் சமுகத்தின் மீதான என் பார்வையை கொஞ்சம் புரட்டிப்போட்டிருக்கிறது என கூட சொல்லலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2024_ஒரு அலசல்

  2024 - இல் நான் மிகப்பெரிய கெஜ புழு..தியாக இருந்தேன். வரும் வருடத்தில் இன்னும் மிகப்பெரிய கெஜ புழு..தியாக மாற போகிறேன். நான் அவ்வொரு ஆண்டு முடியும் போதும் போன வருடத்தை விட இந்த வருடம் சிறப்பாக புழு..தி இருப்பதாக நினைத்து கொள்வதுண்டு. இல்லையென்றால் சில நேரம் என் கீழ்மை குணங்களை அளவிடுவதுண்டு. நான் போன ஆண்டை விட இந்த ஆண்டு எவ்வளவு கீழ்மை குணம் உள்ளவனாக மாறியிருக்கிறேன். எந்த அளவுக்கு என் அல்ப புத்திகள் அரங்கேறியிருக்கிறது என கணக்கிட்டு பார்ப்பேன். நான் ஒரு மகா சோம்பேறி . இலையை போல் தூக்கி ஆற்றில் போட்டால் மிதந்து மிதந்து போவேன். பாறையில் மோதாமல் போகும் சூட்சமும் தெரியும்.என்னை பெரிய பிடுங்கியாக எப்போதும் நினைப்பதில்லை. ஒரு நல்ல இயக்குனரிடம் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது . நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது.  நாம் சாதாரண கடன் கார குடும்பம் என்பதால் சூ..தை கிழிக்கும் சுமை வேறு நம்மை வேட்டையாடுகிறது. எல்லோரையும் போல் நமக்கு எல்லாம் அவ்வளவு இலகுவாக கிடைப்பதில்லை. ஏதோ நெஞ்சில் உரமிருக்க ஓடுகிறோம். உடல் ரீதியாக நிறைய கோளாறுகள் இருக்கிறது. அப்படி பயந்து கொள்ளும் அளவுக்கு ஒன்றுமில்லை தான் பா...

கெடா விருந்து - சிறுகதை

                     கெடா விருந்து    ப ள்ளிக் கூடத்தில் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது . உடனே எங்கள் வகுப்பில் படர்ந்திருந்த சலசலப்பு மெல்ல மடிந்து பெரும் அமைதி நிலவியது . நான் கடைசி பெஞ்சுக்கு முன்பிருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தேன் . எங்கள் வகுப்பில் கடைசி பெஞ்சில் அமர்ந்திருக்கும் ஐந்து மாணவர்கள் மட்டும் அழுக்கு அப்பிய சட்டையை அணிந்திருப்பார்கள் . பொதுவாகவே அரசினர் மாணவர் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களை மட்டும் எங்கள் வகுப்பில் ஒரு மாதிரியாகத்தான் பார்ப்போம் . அவர்களை பார்த்தாலே “ சொறி சிரங்கு பிடிச்சவங்களா ? போய் கடைசி பெஞ்சுல உக்காருங்கடா ?” என சமூக அறிவியல் ஆசிரியர்  துரத்துவார் . எங்கள் வகுப்பிலுள்ள ஐந்து பேரில் கோகுல் மட்டும் நன்றாக படிப்பான் . அவனை பார்த்தால் ஆறாவது படிக்கும் மாணவர்களை போல் அல்லாமல் உயரத்தில் சற்று பெரிய பையனாக இருப்பான் . அவனை வகுப்பில் எல்லோரும் கொக்கு என்று தான் பட்ட பெயர் வைத்து அழைப்பார்கள் . தமிழாசிரியர் கூட அவனை “ இவன பாருங்கடா , மந்த குளத்துல நீந்துர அயிர மீனை கொத்துரவான...

All about 2025

 2025 சொல் வதற்கு இனிய ஆண்டாக இல்லா விட்டாலும் , வாழ்வின் அர்த்தங்களை புதிய பாதையில் எனக்கு உணர்த்திய ஆண்டு. கடந்த ஆண்டு முழுக்க , முழுக்க என்னை இழந்து கொண்டிருந்தேன் என நினைக்கும் போதே ஆச்சரியமாக இருக்கிறது. சுய தெளிவும், சிந்தனையும் அற்று மற்றவர்களின் சொல் பேச்சை கெட்டு கடந்து வந்திருக்கிறேன் என கடைசியாக தான் புரிந்தது.  என் தனி தன்மையை நான் உணர தவறிய இந்த ஆண்டில் நிறைய பாடங்கள் கிடைத்தன. உடல் ரீதியாக நிறைய பலவீனங்களை சந்தித்து வந்த ஆண்டும் கூட.  என்னை மிகவும் நேசிப்பவர்களுக்காக என் ஆசையை கொஞ்சம் இறக்கி வைத்து விட்டு வரலாம் என தோன்றிய ஆண்டு தான் இது. என் வாழ்வில் முதல் முதலாக காதல் உதிர்த்த ஆண்டும் இது தான். அந்த காதலில் கிடைத்த குதூகலமும் மன மகிழ்ச்சியும் சொல்லி அடங்காதவை. ஆனால் எதுவும் நிலையானது அல்ல என இயற்கை எனக்கு மெதுவாக தான் உணர்த்தியது. யார் மீது குறை கூறி எந்த வித பயனும் இல்லை. என்னை நான் மாற்றி கொள்வதில் தான் எல்லா தீர்வும் இருக்கிறது என மெதுவாக தான் புரிய ஆரம்பித்தது. கடந்த ஆண்டில் நேர்ந்த சம்பவங்களும், துயரங்களும் நம்மை இன்னும் வலிமையான மனிதனாக மாற்றும் ...