முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

விவசாய கட்டுரைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்திய விவசாயத்தின் வரலாறு

விவசாயத்தின் வரலாறு "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்’          விவசாயம் மனித ஜீவிகள் மொத்தமும் இதனை சார்ந்து வாழவேண்டிய கட்டாயத்தில் தான் இருக்கிறது.உயிரினம் பிறந்த முதலில் இருந்தே ஏதோ ஒரு விளைச்சல்களை நம்பி தான் இருந்திருக்கிறது.இதை இந்த காலத்தவர் உணர்ந்தார்கள் என்பது தான் கேள்வி குறியாகவே உள்ளது.          மனிதன் பூமியில் தோன்றிய காலத்திலிருந்தே உணவு,உடை,இருப்பிடம் ஏதோ ஒன்றை சார்ந்து வாழ வேண்டிய கட்டாயத்தில் தான் இருந்தது.அதை வைத்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மூன்று பிரிவாக பிரிக்கிறார்கள். கற்காலம்           இந்த காலத்தில் ஆதி மனிதன் காடும்,அதன் சார்ந்த வாழ்வொன்றை வாழ்ந்து வந்தான்.அவனின் அன்றாட தேவைக்கான உணவை வேட்டையாடியோ அல்லது காடுகளிலிருந்தோ எடுத்து கொண்டான்.அந்த கால கட்டத்தில் இயற்கையே கதியென பசுமையோடு கொஞ்சு குத்தாட்டம் போட்டுகொண்டான்.அவனுக்கென எந்த வித மனப்பாகுபாடுமில்லை.நீ உயர்ந்தவன் நான் உயர்ந்தவன் எனும் பேசிக...

செயற்கை உரங்களால் சீரழியும் புண்ணிய பூமி

இங்கே நாம் விவசாயம் செய்து கொண்டிருக்கிறோம்.இந்த உலகத்தின் அவசரநேரத்தில் விவசாயமும் அவசரமாய்  வருமானம் பார்க்கவே இந்த காலத்து விவசாயிகள் எண்ணுவதுண்டு. அது அவர்களின் ஆசைஅல்ல அந்த நிலைமைக்கு தள்ளபட்டுள்ளனர் என்பதே உண்மை.பூச்சிகள் செடிகளை தாக்குவதனால் உண்டாகும் பிரச்சனையைதடுக்கவே செயற்கை மருந்துகள் உருவாக்கப்பட்டது. ஆனால் இன்று அதுவே விவசாயத்தை தன் கட்டுபாட்டுக்குள் வைக்கும்அளவிற்கு வளர்ந்துள்ளது.செடி வளர மருந்து,காய் கனிக்க மருந்து,பூ அதிகமாய் விட மருந்து,இதில் இலையை தாக்கும் நோய்க்குமருந்து,களையெடுக்க கூட சோம்பல்தனப்பட்டு மண்ணின் வளத்தை கெடுக்கும் களை கொல்லி மருந்து. இன்னும் எத்தனையோவகைகளால் வெறும் ரசாயனத்தை வைத்தே செய்யும் விவசாயத்தில் விளையும் க...