![]()
ஒக்கலிகர் வரலாற்றை பற்றி நாம் புரட்டி பார்த்தோம் அதில் திராவிடர்கள் எனவே பெரிதும் குறிப்பிடப்பட்டுள்ளது.அதன்படி கன்னடம்,தெலுங்கு,மலையாளம்,தமிழ் இப்படி மொழியால் பிரிந்திருந்தாலும் அவர்கள் திராவிடர்கள் எனும் பெரிய கலாச்சாரத்தை பின்பற்றியிருக்கிறார்கள்.
ஒக்கலிகர் என்றால் உழுபவர்கள் அல்லது விவசாயிகள் என பொருள்.ஒக்கலிகர் எனும் சொல் கிரேக்கத்திலிருந்து வந்தது என்பது தான் நிஜம்.மனித சாம்ராஜ்யத்தில் சந்திர குப்தனுக்கு முன் ஆண்ட கிரேக்கர்கள் மக்களின் தொழிலுக்கு ஏற்றவாறு பெயர் வைத்திருக்கிறார்கள்.
இவர்கள் முதலில் கர்நாடக மாநிலத்தில் வாழ்ந்தவர்கள்.கவுடாஸ் என அழைக்கபடுபவர்கள்.அதிகமாக மைசூரை ஒட்டி உள்ள ஊர்களில் குடியிருந்தர்கள்.முகலாயர் ஆட்சி தொடங்கியிருந்த காலகட்டத்தில் அவர்கள் கவுடர் குலத்துப் பெண்களை மணந்துகொள்ள விரும்புவதாகவும்,வற்புறுத்தி பெண்களை கடத்தி சென்றதாகவும் கூறப்படுகிறது.அதனால் பயந்த அம் மக்கள் கூட்டம் கூட்டமாக பல மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்தனர்.அதில் தமிழ்நாடு,ஆந்திரா போன்றவற்றில் அதிகமாக குடியேறினர்.
ஒக்கலிகர்கள் இனம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள ஊர்களைகுடிபெயர்ந்தது.குறிப்பாக
தேனி,திண்டுக்கல்,கோவை,மதுரை,திருநெல்வேலி, ஈரோடு போன்றவையாகும்.ஊட்டி பகுதியில்
குடியேறிய கவுடர்கள் படுகர்கள் என அழைக்கப்டுகிறார்கள். படுகர்கள் என்றால் வடக்கர்கள் என்பது பொருள்.
இவர்கள் விவசாயத்தையே தங்கள் தொழிலாக கொண்டுள்ளனர்.ஆக சிறந்த முறையில் பசுமைக்கு இவர்கள் உழவு பெரிய பங்காற்றியுள்ளது.மேலும் தாலி கட்டும் பழக்கம் அற்றவர்கள் ஆவர்.குறிப்பாக கொங்கு ஒக்கலிக கவுடர்களை தவிர்த்து மற்றவர்கள் கட்டுவதில்லை.பெண் தெய்வங்களையே அதிகமாக கும்புடுகின்றனர்.ஒவ்வொரு பெண் தெய்வத்திற்கும் கண்டிப்பாக ஒரு புராணக் கதை வைத்திருப்பார்கள்.வீருசிக்கம்மா,வீருமல்லம்மா,
வீரு லக்கம்மா போன்றவை ஆகும்.
அங்காங்கே வாழும் கவுடர்கள் அவர்களின் கன்னட உச்சரிப்பை அந்ததந்த மொழிகளுக்கு தகுந்தவாறு மாற்றிக் கொள்கின்றனர்.மேலும் பசுவை தங்களின் கடவுளாக வணங்குவதால்
அவர்கள் காமுகுலம் எனும் பெயரையும் சேர்த்து கொள்கின்றனர்.
பொதுவாக தமிழகத்தில் உள்ள கவுடர்களில் தலைசிறந்தவர் கவிஞர்.நா.காமராசன் தேனி மாவட்டம்.இயக்குனர் ஆர். வி.உதயக்குமார்,நடிகை.சரோஜா தேவி,நடிகர்.அர்ஜுன் ஆவர்.
---சிபி சரவணன்.
Nice article and useful to know sbout us
பதிலளிநீக்கு