முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெரி யார் ஏன் கடவுள் எதிர்ப்பாளர் ஆனார் ?

periyar 141: இன்றைய நாயகன் பெரியார் ...


     பெரியாரை வெறும் கடவுள் எதிர்பாளாராகத்தான்
இங்கு பெரும்பாலானோர் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.அதனால் சில மதவாதிகள் அவரை ஏளனமாக பேசுகிறார்கள்.அதற்கெல்லாம் அவர் அஞ்சியவரும் இல்லை.ஈரோட்டில் நல்ல குலத்தில் பிறந்து தன் பால்யத்தில்   நடந்த சில சாதிய தீண்டாமை கொடுமைகளை எதிர்த்து
போராட துவங்கிய நீள்தாடி காரர் அவர்.உலக தத்துவாதிகளை படித்த பகுத்தறிவு பெற்ற
எவன் என்ன சொன்னாலும் தான் செய்வதை செய்து கொண்டிருந்தவர்.அவரின் பெண் ஏன் அடிமையானாள் எனும் நூலை வாசித்திருந்தால்
பெண்களின் மீதான ஆண்களின் புரிதலை உணர முடியும்.அந்த நூல் தமிழுக்கு பெரும் வர பிரசாதம் எனக்கூட சொல்லலாம்.வைக்கம் போராட்டத்தில்
தனக்கான தீண்டாமை கொள்கையை முன்னிறுத்தி செயல்பட்டவர்.அவர் பேசும் போதும்
"வெங்காயம்" என்ற வார்த்தையும்,எழுதும் போதும் "நிற்க" என்ற வார்த்தையும் அதிகம் உபயோகிப்பதுண்டு.தாழ்த்தப்பட்ட மனுதனுக்காக தன் சிந்தனையை உழைப்பை தூவியதால் மனிதனை உயர்த்தும் ஜென்மமாக இருப்பதால்
அவரை பெரியார் என்கிறோம்.தான் வாழ்வின் கடைசி காலத்தில் மூத்திர பையை சுமந்து மேடையில் பேசி பாவப்பட்ட ஜீவன்களுக்காக போராடியவர்.நான் நல்ல குலத்தில் பிறந்தாலும்
என் நண்பனோடு பேசும் போது என் தாத்தா அவனிடம் பேசாதே அவன் கீழ்சாதி என்பார்.அதற்காகவே நான் பேசுவேன் என்பேன்.
என்னை அடிப்பார்.இதில் பெரிய கொடுமை என்னவென்றால் அவரே திமுக கட்சி உறுப்பினர்.
இந்த அளவில் தான் சிலருக்கு பெரியார் மீதான புரிதல் இருக்கிறது. திராவிட கட்சியின் அறிவும் இருக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2024_ஒரு அலசல்

  2024 - இல் நான் மிகப்பெரிய கெஜ புழு..தியாக இருந்தேன். வரும் வருடத்தில் இன்னும் மிகப்பெரிய கெஜ புழு..தியாக மாற போகிறேன். நான் அவ்வொரு ஆண்டு முடியும் போதும் போன வருடத்தை விட இந்த வருடம் சிறப்பாக புழு..தி இருப்பதாக நினைத்து கொள்வதுண்டு. இல்லையென்றால் சில நேரம் என் கீழ்மை குணங்களை அளவிடுவதுண்டு. நான் போன ஆண்டை விட இந்த ஆண்டு எவ்வளவு கீழ்மை குணம் உள்ளவனாக மாறியிருக்கிறேன். எந்த அளவுக்கு என் அல்ப புத்திகள் அரங்கேறியிருக்கிறது என கணக்கிட்டு பார்ப்பேன். நான் ஒரு மகா சோம்பேறி . இலையை போல் தூக்கி ஆற்றில் போட்டால் மிதந்து மிதந்து போவேன். பாறையில் மோதாமல் போகும் சூட்சமும் தெரியும்.என்னை பெரிய பிடுங்கியாக எப்போதும் நினைப்பதில்லை. ஒரு நல்ல இயக்குனரிடம் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது . நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது.  நாம் சாதாரண கடன் கார குடும்பம் என்பதால் சூ..தை கிழிக்கும் சுமை வேறு நம்மை வேட்டையாடுகிறது. எல்லோரையும் போல் நமக்கு எல்லாம் அவ்வளவு இலகுவாக கிடைப்பதில்லை. ஏதோ நெஞ்சில் உரமிருக்க ஓடுகிறோம். உடல் ரீதியாக நிறைய கோளாறுகள் இருக்கிறது. அப்படி பயந்து கொள்ளும் அளவுக்கு ஒன்றுமில்லை தான் பா...

கெடா விருந்து - சிறுகதை

                     கெடா விருந்து    ப ள்ளிக் கூடத்தில் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது . உடனே எங்கள் வகுப்பில் படர்ந்திருந்த சலசலப்பு மெல்ல மடிந்து பெரும் அமைதி நிலவியது . நான் கடைசி பெஞ்சுக்கு முன்பிருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தேன் . எங்கள் வகுப்பில் கடைசி பெஞ்சில் அமர்ந்திருக்கும் ஐந்து மாணவர்கள் மட்டும் அழுக்கு அப்பிய சட்டையை அணிந்திருப்பார்கள் . பொதுவாகவே அரசினர் மாணவர் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களை மட்டும் எங்கள் வகுப்பில் ஒரு மாதிரியாகத்தான் பார்ப்போம் . அவர்களை பார்த்தாலே “ சொறி சிரங்கு பிடிச்சவங்களா ? போய் கடைசி பெஞ்சுல உக்காருங்கடா ?” என சமூக அறிவியல் ஆசிரியர்  துரத்துவார் . எங்கள் வகுப்பிலுள்ள ஐந்து பேரில் கோகுல் மட்டும் நன்றாக படிப்பான் . அவனை பார்த்தால் ஆறாவது படிக்கும் மாணவர்களை போல் அல்லாமல் உயரத்தில் சற்று பெரிய பையனாக இருப்பான் . அவனை வகுப்பில் எல்லோரும் கொக்கு என்று தான் பட்ட பெயர் வைத்து அழைப்பார்கள் . தமிழாசிரியர் கூட அவனை “ இவன பாருங்கடா , மந்த குளத்துல நீந்துர அயிர மீனை கொத்துரவான...

All about 2025

 2025 சொல் வதற்கு இனிய ஆண்டாக இல்லா விட்டாலும் , வாழ்வின் அர்த்தங்களை புதிய பாதையில் எனக்கு உணர்த்திய ஆண்டு. கடந்த ஆண்டு முழுக்க , முழுக்க என்னை இழந்து கொண்டிருந்தேன் என நினைக்கும் போதே ஆச்சரியமாக இருக்கிறது. சுய தெளிவும், சிந்தனையும் அற்று மற்றவர்களின் சொல் பேச்சை கெட்டு கடந்து வந்திருக்கிறேன் என கடைசியாக தான் புரிந்தது.  என் தனி தன்மையை நான் உணர தவறிய இந்த ஆண்டில் நிறைய பாடங்கள் கிடைத்தன. உடல் ரீதியாக நிறைய பலவீனங்களை சந்தித்து வந்த ஆண்டும் கூட.  என்னை மிகவும் நேசிப்பவர்களுக்காக என் ஆசையை கொஞ்சம் இறக்கி வைத்து விட்டு வரலாம் என தோன்றிய ஆண்டு தான் இது. என் வாழ்வில் முதல் முதலாக காதல் உதிர்த்த ஆண்டும் இது தான். அந்த காதலில் கிடைத்த குதூகலமும் மன மகிழ்ச்சியும் சொல்லி அடங்காதவை. ஆனால் எதுவும் நிலையானது அல்ல என இயற்கை எனக்கு மெதுவாக தான் உணர்த்தியது. யார் மீது குறை கூறி எந்த வித பயனும் இல்லை. என்னை நான் மாற்றி கொள்வதில் தான் எல்லா தீர்வும் இருக்கிறது என மெதுவாக தான் புரிய ஆரம்பித்தது. கடந்த ஆண்டில் நேர்ந்த சம்பவங்களும், துயரங்களும் நம்மை இன்னும் வலிமையான மனிதனாக மாற்றும் ...