முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

2024_ஒரு அலசல்

  2024 - இல் நான் மிகப்பெரிய கெஜ புழு..தியாக இருந்தேன். வரும் வருடத்தில் இன்னும் மிகப்பெரிய கெஜ புழு..தியாக மாற போகிறேன். நான் அவ்வொரு ஆண்டு முடியும் போதும் போன வருடத்தை விட இந்த வருடம் சிறப்பாக புழு..தி இருப்பதாக நினைத்து கொள்வதுண்டு. இல்லையென்றால் சில நேரம் என் கீழ்மை குணங்களை அளவிடுவதுண்டு. நான் போன ஆண்டை விட இந்த ஆண்டு எவ்வளவு கீழ்மை குணம் உள்ளவனாக மாறியிருக்கிறேன். எந்த அளவுக்கு என் அல்ப புத்திகள் அரங்கேறியிருக்கிறது என கணக்கிட்டு பார்ப்பேன். நான் ஒரு மகா சோம்பேறி . இலையை போல் தூக்கி ஆற்றில் போட்டால் மிதந்து மிதந்து போவேன். பாறையில் மோதாமல் போகும் சூட்சமும் தெரியும்.என்னை பெரிய பிடுங்கியாக எப்போதும் நினைப்பதில்லை. ஒரு நல்ல இயக்குனரிடம் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது . நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது.  நாம் சாதாரண கடன் கார குடும்பம் என்பதால் சூ..தை கிழிக்கும் சுமை வேறு நம்மை வேட்டையாடுகிறது. எல்லோரையும் போல் நமக்கு எல்லாம் அவ்வளவு இலகுவாக கிடைப்பதில்லை. ஏதோ நெஞ்சில் உரமிருக்க ஓடுகிறோம். உடல் ரீதியாக நிறைய கோளாறுகள் இருக்கிறது. அப்படி பயந்து கொள்ளும் அளவுக்கு ஒன்றுமில்லை தான் பா...

கெடா விருந்து - சிறுகதை

                     கெடா விருந்து    ப ள்ளிக் கூடத்தில் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது . உடனே எங்கள் வகுப்பில் படர்ந்திருந்த சலசலப்பு மெல்ல மடிந்து பெரும் அமைதி நிலவியது . நான் கடைசி பெஞ்சுக்கு முன்பிருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தேன் . எங்கள் வகுப்பில் கடைசி பெஞ்சில் அமர்ந்திருக்கும் ஐந்து மாணவர்கள் மட்டும் அழுக்கு அப்பிய சட்டையை அணிந்திருப்பார்கள் . பொதுவாகவே அரசினர் மாணவர் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களை மட்டும் எங்கள் வகுப்பில் ஒரு மாதிரியாகத்தான் பார்ப்போம் . அவர்களை பார்த்தாலே “ சொறி சிரங்கு பிடிச்சவங்களா ? போய் கடைசி பெஞ்சுல உக்காருங்கடா ?” என சமூக அறிவியல் ஆசிரியர்  துரத்துவார் . எங்கள் வகுப்பிலுள்ள ஐந்து பேரில் கோகுல் மட்டும் நன்றாக படிப்பான் . அவனை பார்த்தால் ஆறாவது படிக்கும் மாணவர்களை போல் அல்லாமல் உயரத்தில் சற்று பெரிய பையனாக இருப்பான் . அவனை வகுப்பில் எல்லோரும் கொக்கு என்று தான் பட்ட பெயர் வைத்து அழைப்பார்கள் . தமிழாசிரியர் கூட அவனை “ இவன பாருங்கடா , மந்த குளத்துல நீந்துர அயிர மீனை கொத்துரவான...

கல் மோதிரமும், தந்தட்டியும் -சிறுகதை

                  ஊ ருக்கு ஒதுக்கு புறமாக , இருக்கும் ஒத்த வீட்டில் பயங்கரமான சம்பவம் ஒன்று நடந்து விட்டதாக கேள்விப்பட்ட மக்கள் கூட்டம் , மொத்தமும் , ஒத்த வீட்டின் முன்பாக குழுமியிருந்தனர் . சுற்றி திராட்சை தோட்டங்களுக்கு மத்தியில் , கோடு கிழித்தார் போல் , நெளிந்து ஓடும் ஒரு பாலடைந்த ஓடையை ஒட்டித்தான் ராமுத்தாயி கிழவியின் வீடு . அவரது கணவர் பேய்காமனுக்கு , ஓடையை ஒட்டி , ஒரு 5 ஏக்கர் நிலம் இருந்தது . அதில் ஒரு பாதி தென்னையும் , மற்ற இடங்களில் , வாழையும் , ஆங்காங்கே தரை வெள்ளாமைகளும் பயிரப்பட்டிருந்தன . ராமுத்தாயிக்கு , சிங்கமுத்து , கட்டையன் என இரண்டு மகன்களும் , காமாட்சி என்ற ஒரு மகளும் உண்டு .  இவர்கள் இருவருக்கும் வேறு ஒரு ஊரிலிருந்த நிலத்தை பங்கு பிரித்து கொடுத்து விட்டு , மீதம் இருக்கும் நிலம் மனைவி ராமுத்தாயிக்கு தான் சொந்தம் எனவும் , அவள் இல்லாத காலத்தில் , மகள் காமாட்சிக்கு பங்குண்டு என எழுதி வைத்துவிட்டு , ஒரு சிறிய விபத்தில் அவர் போய் சேர்ந்துவிட்டார் . இன்ஸ்பெக்டரும் , கான்ஸ்டபிளும் , ஒரு பைக்கில் வர , அவர்களை மரித்து...