முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஞானச் சுடர் - சிறுகதை

  ஞானச்சுடர்     முத்தையனுக்கு இருளை விட ஒளி என்றால் அவ்வளவு பிரியம் . ஒளியின் கைகளில் தன்னை   புதைத்துக்   கொண்டு உறங்க வேண்டும் . அதுவும் அதிகாலை வெயில் தான் அவனது உறக்கத்திக்கான துவக்க நேரம் . கல்லைக் காடுகளில் காட்டுப்பன்றிகள் புகுந்துவிடாமல் காவலுக்கு இருப்பதே அவனது பிரதான வேலை . ஒளி ஒரு மனிதனின் வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கம் வகிக்கிறது என்பார்கள் . முத்தையனின் வாழ்வில் அது துளியுமில்லை . சிறுபிராயத்திலேயே அவனது அம்மா   பஸ்   ஓட்டுனரோடு   ஓடிப்போய் விட்ட சேதி இன்னும் ஊர்   வாய்களுக்குக்   கேளிக்கை   ஆகிவிட்ட பின்பு நிம்மதியாக எப்படி   வாழ்வைக்   கழிக்க முடியும் . அதுவும் அந்த அத்துவான இருளில் அவனது நெற்றியில் முத்தம் கொடுத்து விட்டு எப்படி அவளால் அவ்வளவு   எளிதாக   தன்னை   விட்டுப்   போக முடிந்தது என   நினைத்துப்   புலம்புவதுண்டு . அந்த இருளில் பொழுது கூட அவனை அவ்வளவு   ரணமாக   பாதிக்கவில்லை . பகல் இருக்கிறதே எத்தனை வாய்களை அசைத்துப் பார்க்கிறது .   ஓடுகாளி   ...