ஞானச்சுடர் முத்தையனுக்கு இருளை விட ஒளி என்றால் அவ்வளவு பிரியம் . ஒளியின் கைகளில் தன்னை புதைத்துக் கொண்டு உறங்க வேண்டும் . அதுவும் அதிகாலை வெயில் தான் அவனது உறக்கத்திக்கான துவக்க நேரம் . கல்லைக் காடுகளில் காட்டுப்பன்றிகள் புகுந்துவிடாமல் காவலுக்கு இருப்பதே அவனது பிரதான வேலை . ஒளி ஒரு மனிதனின் வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கம் வகிக்கிறது என்பார்கள் . முத்தையனின் வாழ்வில் அது துளியுமில்லை . சிறுபிராயத்திலேயே அவனது அம்மா பஸ் ஓட்டுனரோடு ஓடிப்போய் விட்ட சேதி இன்னும் ஊர் வாய்களுக்குக் கேளிக்கை ஆகிவிட்ட பின்பு நிம்மதியாக எப்படி வாழ்வைக் கழிக்க முடியும் . அதுவும் அந்த அத்துவான இருளில் அவனது நெற்றியில் முத்தம் கொடுத்து விட்டு எப்படி அவளால் அவ்வளவு எளிதாக தன்னை விட்டுப் போக முடிந்தது என நினைத்துப் புலம்புவதுண்டு . அந்த இருளில் பொழுது கூட அவனை அவ்வளவு ரணமாக பாதிக்கவில்லை . பகல் இருக்கிறதே எத்தனை வாய்களை அசைத்துப் பார்க்கிறது . ஓடுகாளி ...
writter அஞர் நாவல் - வர டீ பதிப்பகம் வெளியீடு https://www.commonfolks.in/books/d/angar