முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆன்மாவின் கண்ணீர் - சிறுகதை

         கார் இன்னும் எங்கள் ஊரை நெருங்கி விடவில்லை. சாலைகள் ஒரு சீராக இல்லாததால் வண்டி குலுங்கியது. சென்னையில் பயணம் துவங்கிய போது குடித்த தேநீரின் கசப்பு இன்னும் நாவை வறட்சியாக்கியது. சேதி வந்ததும் முதலில் அது என் மனைவியின் மூலமாகவே எனக்குத் தகவல் தெரிய வந்தது. அவள் மிகவும் சலனப்படுவது போல் நடித்துக் கொண்டே என்னிடம் அதைச் சொன்னாள். இதற்கு முன்பாக அவள் கடைசியாக அப்படி நடித்தது எனக்கு ஞாபகம் இல்லை. பேருந்து பயணத்தை விட்டுக் குறையக் காலம் ஆகிவிட்டது. நல்ல வேலையும், வசதியும் கிட்டத்தட்ட என்னைச் சோம்பேறியாக ஆக்கிவிட்டது. பயணத்தினூடே காரின் ஓட்டுநர் அடிக்கடி பின் கண்ணாடியில் என்னைப் பார்த்துக் கொண்டே வந்தான். அவனுக்கும் சேதி தெரியும் என்பதால் என் முகம் எவ்வளவு சுருங்கிப் போய் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளத்தான் அவன் அவ்வாறு பார்க்கிறான் என எனக்குத் தெரிந்தும் நான் அவனோடு பேச்சு வளர்க்க விரும்பவில்லை. என்னிடம் கடந்த இரண்டு வருடமாக பணிபுரிந்து வரும் அவனுக்கு எனது எல்லா வகையான முகங்களும் தெரியும். பொறணிப் பேச்சில் பெயர் பெற்ற என் மனைவியின் ப...