முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

புத்தக விமர்சனம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குற்றமும் தண்டனையும்

            குற்றமும் தண்டனையும் மனிதனின் அக மனதை சோதித்து பார்க்கும் ஒரு நாவல்.ரஷ்யாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் தஸ்கோயோவஸ்கி எழுதியது.சுமார் 600 பக்கங்ஙளை கொண்ட இந்த பெரிய நாவலை நான் படிக்க ஐந்து நாளாயிற்று. கதையின் நாயகன் ரஸ்கொல்நிகோவ் சாதாரண குடும்பத்தில் பிறந்தவன்.       படிப்புக்காக பீட்டர்ஸ்பெர்க் நகரில் தங்கி இருப்பவன்.குடும்ப சூழ்நிலை காரணமாக அவன் படிப்பு தடைகிறது.தனது சுய செலவுக்காக அவனின் உடைமைகளை அடகு வைக்கிறான்.அப்படி அவன் அந்த செயலை செய்யும் அடகுபொருளை வாங்கி வைக்கும் நாசகார கிழவியை அவனுக்கு பிடிக்கவில்லை.மேலும் அங்கு உள்ள பொருளை அவன் திருட வேண்டுமென தோன்றுகிறது.திடிரென ஒரு நாள் அந்த கிழவியை கோடாரியால் கொன்றுவிட்டு மேலும் உடனிருந்த கிழவியின் அப்பாவி தங்கையும் கொன்று நகையை எடுத்து தப்பிக்கிறான்.இந்த கொலைக்கு பின்பான அவன் மனநிலை,தான் செய்தது சரி தான் என அவனுக்குள் அவன் உருவாக்கி வைத்திருக்கும் கொள்கை மேலும் எப்படி இவர்களிடமிருந்து தப்பிப்பது என்பது பற்றிய பல குழம்பிய சிந்தனையோடு மனதை துன்புறுத்திக்கொள்ளும் நாயகனின் கதை ...

பூனாச்சி புத்தக விமர்சனம்

பூனாச்சி ஒரு வெள்ளாட்டின் கதை அதை நான் பேசித்தான் ஆக வேண்டும்.ஆம் அந்த கதையை எழுதிய பெருமாள் முருகன் ஐய்யாவுக்கு கோடி கும்புடு. மனுசேன் அணுவணுவா ஆடுகளையும் ஆட்டு மந்தையும் கவனுச்சு எழுதிருக்கார்.மேலும் முக்கியமான விசயம் ஆடைகளுக்கு பெயரெல்லாம் வைத்து ஒரு ஆவணத்தை உருவாக்கியுள்ளார் என சொல்லலாம். மந்தையில் ஆடோட்டி சொல்பவர்களிலிருந்து,அதன் புணர்ச்சி முறைகளில் இருந்து ,ஆட்டுக்கு உடை அடைப்பவனுக்கும் இடையான மனிதத்தை அவர்களின் வாழ்வு முறையையும் ஒரு கிராமத்தானாய் இருந்தும் நான் தெரிந்து கொள்ளாதவையை எழுத்தாளர் எனக்கு சொல்லி தந்தார் எனக்கூட சொல்லலாம்.