முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அஞர் நாவல்

  அணிந்துரை இலக்கிய வகைமையில் எனக்குப் பிடித்ததாக நான் நம்பியது கவிதைகளை தான் பிறகு அது எனக்கேற்ற வகைமையில்லை என்றுணரவே பத்தாண்டுகள் தேவைப்பட்டது. புதிதாக ஒரு புதினத்தை கண்டால் எனக்கு ஒரு புதிய உலகுகினுள் நுழைகிற உணர்வே ஏற்படுகிறது. ஒரு நல்ல புதினம் நம் மேல் ஒரு பிடித்த உடை போல உடலோடு ஒன்றிணைந்துவிடுகிறது. சில புதினங்கள் மனதோடு…அந்த வகையில் “அஞர்” என்னை கலங்க வைத்துவிட்டது. தமிழில் புதினமென்ற வடிவில் நிறைய எழுதப்பட்டிருக்கிறது ஆனால் அவையெல்லாம் புதினங்களா என்று கேட்டால் நான் நிச்சயம் சில கணங்களாவது பதிலற்று திகைத்து நிற்பேன். “அஞர்” ஒரு சிறந்த புதினம் இதை சாதித்த சிபி சரவணனுக்கு நம் வாழ்த்துக்கள். தென்மேற்கின் வட்டார மொழியுடன் அந்த நிலத்தின் அழகை கதையோடு பேசுவது உணர்ச்சிமிக்க இந்த நாவலின் மிகப்பெரிய பலம். இந்த புதினத்தை வாசித்து முடித்தவுடன் துயரில் நெஞ்சு அடைத்துக்கொண்டு கண் கலங்கிய பொழுதில் இப்படி தோன்றியது. “பிறகு அங்கிருந்து அத்தனையும் காணாமல் போயிருந்தது. ஆனால் அங்கு கொஞ்சம் வெதுவெதுப்பான தூய காதல் மட்டும் தேங்கியிருந்தது. அது இன்னும் ஆவியாகமலும், அழிந்...