கம்பமெட்டு மலைகளில் சுருள் சுருளாக உள்ள சாலையில் பயணிப்பது ஒரு சுகானந்த அனுபவம். அதுவும் வாழ்வின் பெரும்பகுதியை நகரத்தில் கழிக்கும் என்னை போன்ற நகரத்து வாசிக்கு மலைகள் எப்போதும் புத்துயிர்ப்பை தரக்கூடியவை. நீண்ட கால நண்பர் ஒருவருக்கு கல்யாணம். அதுவும் மேற்கு தொடர்ச்சி மலைகள் கூடும் இடத்தில் அமைந்துள்ள அழகான வீட்டில் தான் எளிமையாக கல்யாணம் நடக்க போகிறது. நகரத்தில் எங்களோடு அவர் பணிபுரிந்தாலும் அவர் பக்கா கிராமத்து காரர் என அடிக்கடி அவரது சொல்லாடல்கள் காட்டி கொடுத்து விடும். மேற்கு தொடர்ச்சி மலையில் அதாவது கம்பம் பகுதியில் இருந்து ஒவ்வொரு கொண்டை ஊசி வளைவாக மலையில் ஏறுவதே ஒரு பேரனுபவத்தை தந்தது. எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் இரண்டு பேரும், அதே ஊரை மற்ற இரண்டு நண்பர்கள் உதவியால் ஜீப்பில் அழைத்து செல்லப் பட்டோம். அதில் எத்து பல்லும் , நரைத்த முடியும் கொண்ட நல்லாண்டி தோன தொன வென பேசிக் கொண்டே வந்தார். ஒவ்வொரு கொண்டை ஊசி வளைவிலும் பீடியை இழுத்து புகையை ஊதி கொண்டே வந்தார். அவர்கள் எங்களை கம்பத்தில் ஏற்றிய முதலே அவர்கள் முகத்தில் ஒரு பேரானந்தம் விரவி கிடந்தது. மற்றொரு ந...
2025 சொல் வதற்கு இனிய ஆண்டாக இல்லா விட்டாலும் , வாழ்வின் அர்த்தங்களை புதிய பாதையில் எனக்கு உணர்த்திய ஆண்டு. கடந்த ஆண்டு முழுக்க , முழுக்க என்னை இழந்து கொண்டிருந்தேன் என நினைக்கும் போதே ஆச்சரியமாக இருக்கிறது. சுய தெளிவும், சிந்தனையும் அற்று மற்றவர்களின் சொல் பேச்சை கெட்டு கடந்து வந்திருக்கிறேன் என கடைசியாக தான் புரிந்தது. என் தனி தன்மையை நான் உணர தவறிய இந்த ஆண்டில் நிறைய பாடங்கள் கிடைத்தன. உடல் ரீதியாக நிறைய பலவீனங்களை சந்தித்து வந்த ஆண்டும் கூட. என்னை மிகவும் நேசிப்பவர்களுக்காக என் ஆசையை கொஞ்சம் இறக்கி வைத்து விட்டு வரலாம் என தோன்றிய ஆண்டு தான் இது. என் வாழ்வில் முதல் முதலாக காதல் உதிர்த்த ஆண்டும் இது தான். அந்த காதலில் கிடைத்த குதூகலமும் மன மகிழ்ச்சியும் சொல்லி அடங்காதவை. ஆனால் எதுவும் நிலையானது அல்ல என இயற்கை எனக்கு மெதுவாக தான் உணர்த்தியது. யார் மீது குறை கூறி எந்த வித பயனும் இல்லை. என்னை நான் மாற்றி கொள்வதில் தான் எல்லா தீர்வும் இருக்கிறது என மெதுவாக தான் புரிய ஆரம்பித்தது. கடந்த ஆண்டில் நேர்ந்த சம்பவங்களும், துயரங்களும் நம்மை இன்னும் வலிமையான மனிதனாக மாற்றும் ...