சோழ வம்சத்தில் பாராந்தகனுக்கு பிறகு சுந்தர சோழன் ஆட்சிக்கு வந்தார்.சுந்தர சோழனின் இரண்டு மனைவிகளில் முதல் மனைவிக்கு பிறந்தவன் ஆதித்தகரிகாலன்,இரண்டாவது மனைவிக்கு பிறந்தவர்கள் குந்தகை,அருள்மொழி வர்மன்.நான் முன்னரே சொன்னது போல்
இப்போது சோழவம்சத்தை ஆளுவது சுந்தர சோழன்.சுந்தர சோழன் நல் சிவபக்தி உடையவர்.
அவர் பாண்டிய நாட்டை எதிர்த்து போரிட வேண்டுமென நினைப்பது மட்டும் தான் அவர் வேலை.மத்தபடி எல்லா வேலைகளையும் ஆதித்த கரிகாலன் பாத்துகொள்வான்.போர்களத்தில் இறங்கிவிட்டால் தீரனாக மாறி விடுவான்.வெறிகொண்டு எதிரியை தாக்குவான்.ஒரு முறை பாண்டிய மன்னனை கொன்று அவன் தலையை பழையூரின் கோபுரத்திற்கு முன்பே இருந்த மரத்தில் தொங்கவிட்டார்.அப்படிப்பட்ட வீரனை சில சூட்சம கிருமிகள் கோழைத்தனமாக கொன்றிருக்கிறார்கள்.சதியின் கொடூரம் யாரை விட்டது. தன் வீர மகன் இறப்பை எண்ணி எண்ணி வருந்திய உத்தமசோழனும் கொஞ்ச நாளில் உயிரிழந்தார்.அவரின் இறப்புக்கு பின் சோழ வம்சத்தின் மாபெரும் கதாநாயகன் அருண்மொழி வர்மனெனும் ராஜராஜ சோழன் அரசனானார்.
அப்போதே சோழவம்சத்திற்கு பொற்காலம் பிறந்துவிட்டது.சிறு வயதிலையே புராணத்தையும் போர் கலையையும் நன்கு கற்று தெளிந்த நல் வீரனவன்.இவரின் ஆட்சியில் உறையூரை தலைநகராக முதலில் கொண்டிருந்த சோழ அரசின் மண்டத்தை தஞ்சையில் மாற்றினான்.ஆம் கங்கை நதி நீர் கரையில் மாளிகை கட்டி அதன் இனிமையை ரசிக்க யார் தான் விரும்ப மாட்டார்கள்.ராஜ ராஜன் தனது நாட்டை சுற்றியுள்ள ஒவ்வொரு அரசையும் வென்று குவிக்க துடித்தான்.முதலில் பாண்டிய மன்னர்களை போரில் வென்று மதுரையை கைப்பற்றினார்.பிறகு தனது வணிக பரப்பை அதிகப்படுத்த விரும்பிய சேர நாட்டிடம் போர் புரிய துணிந்தார்.அதற்கு முன் அங்கு ஒரு ஒற்றனை அனுப்பி சாமாதானம் பேச சொன்னார்.ஆனால் அவர்களோ ஒற்றனை சிறைபிடித்து கொடுமைபடுத்தினர்.இதனை கேள்விபட்ட அருண்மொழிவர்மனுக்கு கோபம் தலைக்கேறி தனது மகனான ராஜேந்திர சோழனை உடனே அந்த நாட்டை வென்று சூரையாடிவிட்டுவா என வழி அனுப்பினார்.சேர நாட்டை அதாவது தற்போதைய கேராளாவை காந்தளுர் சாலையில் நடைப்பற்ற போரில் வென்றார் ராஜ ராஜன்.
குடகுமலை,உதகை போன்ற பகுதிகளையும் வென்று குவித்து புலிக்கு பிறந்தது புலி தான் என பல போரில் வெல்ல அப்பாவிற்கு உறுதுணையாக நின்றார் ராஜேந்திர சோழன்.
மேலே உத்தம சோழனை விட்டு விட்டேன். அவர் ஒரு சூழ்ச்சி மன்னன் சுந்தர சோழநாட்டு மக்களிடம் கெட்ட பெயருடன் ஆட்சி செய்து வந்தார் உத்தம சோழன். அதன் பிறகே ராஜ ராஜன் மன்னரானார்.இவர் உத்தம சோழனின் ஆட்சியில் அடிமக்களோடு சென்று நாட்டின் அவல நிலையை புரிந்து கொண்டார்.
தொடரும்....
கருத்துகள்
கருத்துரையிடுக