முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

முயல் கவிதைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெருமகன்

பரிதியின் விழிகளில் உழகும் பெருமகன் பிளந்த நிலச்சதையில் நெளிந்த புழுதனைதேடி நித்திரை நிதம் தொலைத்தான். கட்டியமாட்டின் மலத்துளையில் எட்டிய உரந்தனை கொட்டியே பயிர் விதைத்தான். தூரல் தட்சணை எதிர்பார்த்து கருஞ்சிலையிடம் கைகுவித்தான்.. மிச்சமே சொச்சமாய் விழுந்த சில்லரை மழைத்துளியின் அறிமுக வாசத்திலே அரும்பாய் கதிர் முளைத்தெடுத்தான். எச்சில் பாலில் முளைத்த மெழிந்த எழும்பு கன்றாய் பச்சை பயிரில் முளைத்த மீதி வெள்ளாமைதனை விற்று உயிர் வளர்த்தான்.. ஒட்டி வயிர் சுமந்து சட்டி கூழ் குடித்து நம் நாவில் கொட்டும் ருசி கொடுத்தான் ….

கரிக்குழம்பு

விடியங்காலையே எழுந்து மேய்த்த ஆட்டின் கழுத்தறுத்து மேனி உரிக்க தொங்கவிட்டு அது அதுவாய் அறுக்க ஆட்கள் வந்துவிட்டனர்.. தூக்குசட்டியை கணம்பிடித்து வாங்கிப் போன கரித்துண்டுகளில் ஈரலும்,தலைக்கறியும் ஆடிப்பெருக்குக்கு இணாமாம்... ஆட்டுரலில் வளையலிசையோடு நசுங்கிய அந்தந்த சில்லுகளை கொட்டிக் கவுத்தி உலைச்சந்தில் ஒடித்த விறகு திணித்து மிதக்கும் கொலுப்பை கிழறிவிட்டு மொக்கை தோட்டத்து வாழைஇலையில் குமித்து வைத்த ரேசன் சோறில் ஊற்றிய கறிக்குழம்பை தவிர வேறென்ன வேண்டும் ஜென்மத்தில்...

நாகக்கயிறு

டவுசர் புற்றிலிருந்து உருவிய தலைசிதறிய நாகத்தின் நுனியை அந்த மரப்பிரமீடில் வைத்து கட்டைவிரலால் தலை நெறுக்கிப்பிடித்து இறுகச் சுற்றிக்கட்டி வாலை சுண்டுவிரல...

புணர்குறி

<#> நகத்தின் சிறிய சந்தில் நுழைக்கபட்ட ஊசியாய் இலக்கண மற்ற புணரில் அவளின் யோனிமொட்டில்  தடுத்தல்களை எரித்து தயையின்றி  நுழையும் அந்த பெருத்த அம்பு நகப்பிராண்டல...

கவிதை

உங்களை போல எனக்கும் இன்னொரு என் உண்டு.. கோர வதனம் அதனின் இயல்பு… சரீரத்தின் அசைவுகளை வழி மாற்றும் உத்தி அதற்குண்டு… விழிகளின் 180 யை 360 ஆக சுழற்றிவிட்டு சிலாகிக்கும் .. ...

சவக்கிடங்கு

பெய் ரூட்டில் நடந்த துப்பாக்கிகளின் இரை பிணங்களவை.. சவ கிடங்கு காவலனின் கால்களெல்லாம் ரத்தம்.. சவ குழிகள் நிறைந்த ஏக்கத்தில் இடமில்லை என்றான் இறுதி சடங்கன்.. ஒரு பிணம் "நான் இஸ்லாம் பிணம்   மந்திரியின் மகனும் கூட   எனக்கே இடமென்றது.. ஒரு பிணம்    "நான் யூதப் பிணம்      உயர் குலத்தோனுக்கு     இடமில்லையா??? ஒரு பிணம்     "நான் கிருத்துவ பிணம்       மெய்படி நானே      உகந்தோனென்றது… ஒரு பிணம்      " நான் அமைச்சரின்        அண்ணன் பதவி       பத்தரம் என்றது.. உடனே அப்பிண்டத்திற்கு சகல நெறியோடு அடக்கம்.. ஏனோ அது அரசாங்க சவகிடங்காம்….      

புள்ளி

குள நீரின் மேனியொட்டி காற்றுத் தரையில் பரபரப்பாக தும்பி வரையும் கோலத்திற்கு புள்ளியுமில்லை உருவகமுமில்லை மதிப்பெண் கேட்கிறது எப்படி தருவேன் நான்???

நிசப்தம்

அந்த தூயஇருட்டில் நிசப்த்தை பார்த்து பேச ஒரு வாய்ப்பு மொழி கொஞ்சம் விளங்கவில்லை… ஏதோ சலசலப்பு இலக்கணம்.. கூசும் பாசை போலிருக்கிறது... ஆனால் கொஞ்சம் புலப்படுகிறது...

அம்மா கவிதை

பிச்சைகாரர்கள் தன் அம்மாவை முதியோர்இல்லம்  சேர்க்க சொல்லி கெஞ்சுபவன்  கடவுளை வணங்கி தன்னை  மட்டும் காப்பற்ற கேட்பவன்  விவசாய தொழிலை  மதிக்காது சோறு கேட்பவன்  தன் உண்மையான தோழியிடம்  காதலிக்க கேட்பவன்  கம்மங்குழை கேவளபடுத்தி  பீட்சா கேட்பவன்  மணலை அள்ளி கட்டிடம் கட்டிவிட்டு  மழை கேட்பவன்  இன்னும் மாமனாரிடம்  வரதட்சணை கேட்பவன்  சாக்கடை சுத்தம் செய்பவனை  குடிசையில் தள்ளி மாடி வீடுகேட்பவன்  இதற்கெல்லாம் மேலாமாக  ஒன்றுமே செய்யாதுஓட்டு கேட்பவன்  இவர்கள் தான் உலகத்தின்  உண்மையான பிச்சைகாரர்கள்....  ---------- சிபி