முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாலையும் கழுத்தும் _சிறுகதை

             அடுத்தவன் வீட்டில் அடிதடி என்றால் வேடிக்கை பார்த்து ரசிப்பது அந்த ஊர் காரர்களின் பொழுதுபோக்காயிற்று.

Check out new work on my @Behance portfolio: "Tamil Wedding ...
        அப்படித்தான் ராகவன் வீட்டிலும் ஒன்று நடந்துகொண்டிருந்தது.ராகவன் அப்பா அவனின் துணி மணிகளை தூக்கி வெளியே வீசிக் கொண்டிருந்தார்.
  "எவளடா…இழுத்துக்கு வந்து நிக்கிற???பன்னி மேக்கிறவன் மகளாம் எனக்கு மருமகளா???
வெக்காளி ஒழுக்கா ஓடிப்பொயிரு ஏன் மானத்தை வாங்கமா…."கணத்த கோபத்தோடு இப்படி பேசிச்கொண்டே இருக்க ராகவனும் அவனின் காதலியும் தலையை தொங்க போட்டு நின்றிருந்தார்கள்.
    கூட்டத்தில் ஒரு பெருசு…"கூப்பிட்டு வாரவேன் காலகாலத்தில வர வேணாமா…இன்னேரத்தில வந்து தூக்கத்தை கெடுக்குறானே…"
    "யோவ் மொக்க…உனக்கெல்லாம் வயசாச்சுனு தே பேரு…பெரிய மனுசானா போய் பஞ்சாயத்தை முடிச்சு விடுயா என இன்னோருவன் சொல்ல…"
    "அடியேய் …சுளி மகனே..நீயும் அவன் கூட்டாளி தானாட…கோளாற அந்த புள்ளையை
சேத்துவிட்டுட்டு இங்க வந்து ஒன்னும் தெரியாதவனாட்டம் நிக்கிறியா…இருடி உக்கப்பன் கிட்ட போட்டு விட்டு நோனிய பிதுக்க சொல்றேன்.
அப்டீனு உருமாவை கட்டினார் மொக்கை.
         இப்படியே கூட்டம் ஆளுக்கொன்னாய் பேசிக் கொண்டிருக்க என்ன செய்வதென தெரியாமல்
ராகவனின் அம்மா தலையை விரித்து போட்டு அழுகிறாள்.
     கொஞ்ச நேரத்தில் போலீஸ் வண்டி வந்து நின்றது.சத்தம் கேட்டு வந்திருப்பார்கள் போலிருக்கிறது.
    "எவன் வீட்லையாச்சு சண்டையின வந்து நின்னுகிட்டு பொரணி பேசுறது பீத்த பயலுக..
பஞ்சாயத்து பண்ணி பிள்ளைய வீட்டுக்குள்ள அனுப்புறதை விட்டுபுட்டு வேடிக்கை பாக்கிறாங்க பாரு….என்னயா மாப்பிள்ளை பிள்ள மேஜராயா???
ராகவனை பார்த்து போலிஸ் கேட்க

"ஆமா யா???"என்றான் ராகவன்.

"ரிஜிஸ்டர் பண்ணியா???

"பண்ணியாச்சுங்கையா???

அப்பறம் என்ன மயித்துக்கியா  ராமரு  இப்டி துள்ளிக்கிருக்க…

"ஆனது,ஆகிப் போச்சு புதுசா கல்யாணமானவங்களை
கூப்பிட்டு போயி ஆக வேண்டியத பாப்பயா???"படார் படார் என பேசி விட்டு
போலிஸ் காரர் வாக்கி டாக்கியில் வந்த அறிவிப்பை கேட்டு கொண்டிருந்தார்.

மேலும் கூட்டத்தில் பொரணி வெடிக்கிறது.
    "எப்டி இருந்தாலும் அவங்க ஆளுகள எப்படியப்பா
ஏத்துகிறது???இப்படி ஒருவன் சொல்ல
    "தூண்டை இடுப்புல கட்டி குப்புட்றேன் சாமினு
சொல்றவேன்லா நம்ம ஆளுகளுக்கு சம்மந்தியா???இன்னோருவன்
   "எங்கிட்டாச்சும் போய் பொழச்சுகட்டும் என்னமோ இவன நம்பி வந்துருச்சு..அதுக்கு என்ன செய்வ..."என ஒரு அக்கா இரக்கப்பட..
     தன் குடும்பத்தின் மானமே போனதென ராமர் நேஞ்சிள் கை வைத்து இடிந்து போய் உக்காந்தார்.
     "ஏம்மா…பொண்ணு,உன்ன வீட்டுக்குள்ள விடலனா சொல்லுமா..உன் மாமனார் மேல ஒரு கம்லேண்ட குடு நா பாத்துக்கிறேன்.மாலையும் கழுத்துமாய் நின்ற அவளை பார்த்து கேட்டார் போலீஸ்.
   இவ்வளவு நேரம் அமைதியாக இருந்தவள்
திடிரென..சார் எனக்கு இந்த மாப்பிளைய  பிடிக்கல சார்..இந்த காட்டு பயலுகளோடலா  வாழ முடியாது.சாவடுச்சாலும் அடுச்சுருவாங்க ….
       என சொல்லிக்கொண்டே மாலையை கழற்றி கூட்டத்தின் மீது எறிந்து விட்டு காளிப் பார்வையோடு நடந்தாள்.கூட்டம் அவளுக்கான பாதையை ஒதிக்கி தந்தது.

  





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2024_ஒரு அலசல்

  2024 - இல் நான் மிகப்பெரிய கெஜ புழு..தியாக இருந்தேன். வரும் வருடத்தில் இன்னும் மிகப்பெரிய கெஜ புழு..தியாக மாற போகிறேன். நான் அவ்வொரு ஆண்டு முடியும் போதும் போன வருடத்தை விட இந்த வருடம் சிறப்பாக புழு..தி இருப்பதாக நினைத்து கொள்வதுண்டு. இல்லையென்றால் சில நேரம் என் கீழ்மை குணங்களை அளவிடுவதுண்டு. நான் போன ஆண்டை விட இந்த ஆண்டு எவ்வளவு கீழ்மை குணம் உள்ளவனாக மாறியிருக்கிறேன். எந்த அளவுக்கு என் அல்ப புத்திகள் அரங்கேறியிருக்கிறது என கணக்கிட்டு பார்ப்பேன். நான் ஒரு மகா சோம்பேறி . இலையை போல் தூக்கி ஆற்றில் போட்டால் மிதந்து மிதந்து போவேன். பாறையில் மோதாமல் போகும் சூட்சமும் தெரியும்.என்னை பெரிய பிடுங்கியாக எப்போதும் நினைப்பதில்லை. ஒரு நல்ல இயக்குனரிடம் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது . நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது.  நாம் சாதாரண கடன் கார குடும்பம் என்பதால் சூ..தை கிழிக்கும் சுமை வேறு நம்மை வேட்டையாடுகிறது. எல்லோரையும் போல் நமக்கு எல்லாம் அவ்வளவு இலகுவாக கிடைப்பதில்லை. ஏதோ நெஞ்சில் உரமிருக்க ஓடுகிறோம். உடல் ரீதியாக நிறைய கோளாறுகள் இருக்கிறது. அப்படி பயந்து கொள்ளும் அளவுக்கு ஒன்றுமில்லை தான் பா...

கெடா விருந்து - சிறுகதை

                     கெடா விருந்து    ப ள்ளிக் கூடத்தில் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது . உடனே எங்கள் வகுப்பில் படர்ந்திருந்த சலசலப்பு மெல்ல மடிந்து பெரும் அமைதி நிலவியது . நான் கடைசி பெஞ்சுக்கு முன்பிருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தேன் . எங்கள் வகுப்பில் கடைசி பெஞ்சில் அமர்ந்திருக்கும் ஐந்து மாணவர்கள் மட்டும் அழுக்கு அப்பிய சட்டையை அணிந்திருப்பார்கள் . பொதுவாகவே அரசினர் மாணவர் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களை மட்டும் எங்கள் வகுப்பில் ஒரு மாதிரியாகத்தான் பார்ப்போம் . அவர்களை பார்த்தாலே “ சொறி சிரங்கு பிடிச்சவங்களா ? போய் கடைசி பெஞ்சுல உக்காருங்கடா ?” என சமூக அறிவியல் ஆசிரியர்  துரத்துவார் . எங்கள் வகுப்பிலுள்ள ஐந்து பேரில் கோகுல் மட்டும் நன்றாக படிப்பான் . அவனை பார்த்தால் ஆறாவது படிக்கும் மாணவர்களை போல் அல்லாமல் உயரத்தில் சற்று பெரிய பையனாக இருப்பான் . அவனை வகுப்பில் எல்லோரும் கொக்கு என்று தான் பட்ட பெயர் வைத்து அழைப்பார்கள் . தமிழாசிரியர் கூட அவனை “ இவன பாருங்கடா , மந்த குளத்துல நீந்துர அயிர மீனை கொத்துரவான...

All about 2025

 2025 சொல் வதற்கு இனிய ஆண்டாக இல்லா விட்டாலும் , வாழ்வின் அர்த்தங்களை புதிய பாதையில் எனக்கு உணர்த்திய ஆண்டு. கடந்த ஆண்டு முழுக்க , முழுக்க என்னை இழந்து கொண்டிருந்தேன் என நினைக்கும் போதே ஆச்சரியமாக இருக்கிறது. சுய தெளிவும், சிந்தனையும் அற்று மற்றவர்களின் சொல் பேச்சை கெட்டு கடந்து வந்திருக்கிறேன் என கடைசியாக தான் புரிந்தது.  என் தனி தன்மையை நான் உணர தவறிய இந்த ஆண்டில் நிறைய பாடங்கள் கிடைத்தன. உடல் ரீதியாக நிறைய பலவீனங்களை சந்தித்து வந்த ஆண்டும் கூட.  என்னை மிகவும் நேசிப்பவர்களுக்காக என் ஆசையை கொஞ்சம் இறக்கி வைத்து விட்டு வரலாம் என தோன்றிய ஆண்டு தான் இது. என் வாழ்வில் முதல் முதலாக காதல் உதிர்த்த ஆண்டும் இது தான். அந்த காதலில் கிடைத்த குதூகலமும் மன மகிழ்ச்சியும் சொல்லி அடங்காதவை. ஆனால் எதுவும் நிலையானது அல்ல என இயற்கை எனக்கு மெதுவாக தான் உணர்த்தியது. யார் மீது குறை கூறி எந்த வித பயனும் இல்லை. என்னை நான் மாற்றி கொள்வதில் தான் எல்லா தீர்வும் இருக்கிறது என மெதுவாக தான் புரிய ஆரம்பித்தது. கடந்த ஆண்டில் நேர்ந்த சம்பவங்களும், துயரங்களும் நம்மை இன்னும் வலிமையான மனிதனாக மாற்றும் ...