முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

கடன் -சிறுகதை

   ஏன் இரவை இவ்வளவு  வேகமாகப்  புணர்ந்து கொண்டிருக்கிறேன். மூளை அதிர யார் சுத்தியால் அடிப்பது. மின் விசிறியின் ஓசை ஏன் அறையின் அமைதியை இப்படி  திங்கிறது . பசிக்கு இத்தனை பெயர்கள் வைத்து யார் ஆற்றுகிறார்கள். என்னை நானே கொன்று கொல்ல வேண்டுமென ஆசையாய் இருக்கிறது. மற்ற ஜீவ  ராசிகளைப்  போல இந்த உலகத்தில் வாழப் பயிற்சி  எடுத்துக்  கொள்ளாத என்னால்  தற்கொலையைத்  தவிர வேறெதுவும் சிந்திக்க முடியவில்லை.  காலையிலிருந்து அம்மா அழைத்த வண்ணமிருக்கிறாள். அப்பனுக்கு நோய் முற்றி விட்டதாம். "சாகும் முன்பாவது வந்து பார் என்பதே அவளது பேராசையாய் இருந்தது. ஆனால் நான்  எப்படிச்  செல்வது கையில்  சுத்தமாகக்  காசேயில்லை. யாரிடமாவது கடன் கேட்கலாமா?  அதற்குப்   பதிலாகப்  பிச்சை எடுத்தால் என்ன?   கடன் அந்த வார்த்தை தான் எங்கள் குடும்பத்தை  சின்னாபின்னமாக்கியிருக்கிறது .விவசாயத்திலிருந்து, ஆடம்பரம் வரை எல்லாவற்றுக்கும் கடன்,வட்டி கட்டி கட்டியே அப்பன் தேய்ந்து போனான். இதில் குடிப்பழக்கம் வேறு. இத்த...

பிங்க் நிற காதல்

பிங்க் நிற காதல் ஆர்த்திக்கு எப்போதாவது இயற்கையின் மீது பெரும் பற்று வரும். அதுவரை அந்த அறைக்குள்ளேயே அடைந்து கிடப்பாள். இன்டர்நெட்டில் படம் பார்ப்பது, அதை விட்டால் கேம் விளையாடுவது தான் அவளின் பிரதான பொழுதுபோக்கு. "வயசு 25 ஆகப்போகுது இன்னும் குழந்தை மாதிரி கேம் விளையாடிக்கிட்டு இருக்க ,நீயெல்லாம் புருசன் வீட்டுக்கு போய் என்ன செய்ய போறியோ? " அம்மா ஒவ்வொரு முறை இப்படி திட்டும் போதும் அவள் நெஞ்சுக்குள் பெரும் பயம் தொற்றிக் கொள்ளும்.நெஞ்சு இரும்பாய் கனத்து இறுக்கமடைவதாய் உணர்வாள். ஒரு ஆணோடு கை கோர்த்து நடக்க வேண்டுமா? அவன் உடலோடு உடலுரசி ஸ்பரிசம் தீண்ட வேண்டுமா? இதனை அவளால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அதற்கு தற்கொலையே மேல் என நினைத்தாள். மிகவும் ஒல்லியான தேகமும்,ரொம்பவும் அழகென சொல்லிவிடக்கூடியவளாய் இல்லாவிட்டாலும் லட்சணமான முகப் பச்சியுள்ள மாநிறத்துக்கு காரிதான் ஆர்த்தி. ஆனால் அந்த கண்கள் எவ்வளவு ஒளியை தரக்கூடியதாக இருக்கிறது. முதல் முதலாக அவளை நேருக்கு ,நேராய் பார்த்து பேசும் யாரும் விழுந்து...

பணியாரம் - கவிதை நூல்

கணியம் வெளியாடக எனது கல்லூரி கால கவிதைகள் இணையத்தில் வெளியாகியுள்ளன. பணியாரம் நூலை வாசிக்க கீழே உள்ள லிங்கே சொடுகவும். https://freetamilebooks.com/ebooks/paniyaram/

the Mirror -திரைக்கதை அமைப்பு

Jafar panahi இயக்கிய the mirror திரைப்படம் 1997ல் வெளியானது. இந்த படம் ஒரு சிறுமியை முக்கிய கதாப்பாத்திரமாக வைத்து எடுக்கப்பட்டது. கதை ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே குழந்தையின் நடிப்பு பார்பவர்களை கவர்ந்துவிடும். பள்ளி முடித்துவிட்டு வீட்டுக்கு போக அம்மாவுக்காக காத்திருக்கும் சிறுமி,நேரம் ஆகியும் அம்மா வரவில்லை என போன் செய்ய விவரமாக சாலையை கடந்து போகிறது. போன் பூத்தில் ஏறி போன் செய்து அம்மா எடுக்காததால் விரக்தியான பெண்ணை பள்ளி ஆசிரியையின் கணவர் பேருந்து நிறுத்தில் இறக்கி விடுகிறார். அங்கு சில நிமிடங்கள் காத்திருந்தும் அம்மா வந்த பாடில்லை எனவே சிறுமியே ஒரு பஸ்ஸில் ஏறி உட்கார்ந்துகொள்கிறாள். அங்கே ஜோசிய கார பெண்ணோருத்தி பெண்களுக்கு ஜோசியம் பார்ப்பதை உற்று கவனிக்கிறாள். வண்டி போகும் போது சாலையில் அம்மாவை போல யாரோ தெரிய மீண்டும் பேருந்திலிருந்து இறங்கி அம்மாவை பார்க்க ஓடுகிறாள். ஆனால் அங்கே அவளில்லை. வெறுமையில் மீண்டும் இறங்கிய பஸ்ஸிலே ஏறி பயணிக்கிறாள். பயணத்தில் பெண்கள் தங்களது வாழ்க்கையில் அன்றாடம் சந்திக்கும் வலிகளை பகிர்ந்து கொள்கிறார்கள். காதலர்கள் இருவர் ஸைட் அடிக்கும் காட்சியை பார்த்...

டாக்சி -சிறுகதை

அந்த இருள் அவ்வளவு இலகுவாக இருந்திருக்க வேண்டும் பௌர்ணமி இருளைத் தின்று உடல் கூசும்  மெல்லிய ஒளியை எங்கும் பரப்பியது.  தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அதிவேகத்தில் சீறின.   பெட்ரோல் பங்கை ஓட்டிய சாலையோரத்தில் முழு சிரிப்போடு மையில் கல்லை போல ஒருத்தி நின்றிருந்தாள்.  பாவப்பட்டு உருகி வழியும் முகவாகு, கூர்மையான கண்கள் , வகிடெடுத்து  சீவிய முடி தோல் மீது சர்பமாய் வீற்றிருக்கும் மல்லிகை பூ.  அந்த இருளிலும் சிலுசிலுக்கும் ஜிகினா போட்ட  சேலை . முந்தானையை  படபடப்போடு நோண்டிக்  கொண்டிருக்கும் கைகள். சாலையின் இடதும் வலதும் அவளது கண்கள் மாறி,மாறி பயணப்பட்டன.     பயத்தைப் போக்க வாய் நிறைய வெற்றிலை போட்டு மென்று கொண்டே  நின்றிருந்தாள். மஞ்சள் கலர் நம்பர் பிளேட் போட்ட வெள்ளைக் காரொன்று மெல்ல ஊர்ந்து வந்து நின்றது.வண்டியிலிருந்தவன் கார் கண்ணாடியை இறக்கி அவளை பார்த்தான்.அவன் விழிகளில் நிறைந்திருந்த தூய்மை அவனை நம்பி வண்டியில் ஏறலாம் என அவளுக்கு தோன் றியது. எதுவும் பேரம் பேசாமல் வண்டியில் ஏறி உட்கார்ந்தாள்.வண்டி மெல்ல ஊர்ந்த...

பொட்டல் கனவு -சிறுகதை நூல்

 எனது சிறுகதை" பொட்டல் கனவு " ஒன்று அமேசான் கிண்டிலில் வெளியாகியிருக்கிறது. #Pentopublish4  போட்டிக்காக எழுதப்பட்ட சிறுகதை .  //வறியவர்களின் வாழ்வை பிரதிபலிப்பதே இக்கதை. கரிசல் நிலங்களின் வாழும் தாழ்த்தப்பட்டவர்களின் நிறைவேறாத ஆசைகள், சொல்ல முடியாத வடுக்கள் இவையை ஒரு ஆலமரத்தின் வேர்களினூடே பயணித்து அம்மனிதர்களின் பிரச்சனைகளை விவரிக்கிறது . இன்னும் எத்தனை மாரிகள் இந்த நிலத்தில் கடைசி வரை அடிமைகளாக வீழப்போகிறார்களோ ?//  வாசிக்க : https://www.amazon.in/dp/B08R9MXKP3/ref=sr_1_1?dchild=1&keywords=pottal+kanavu&qid=1608910301&s=digital-text&sr=1-1

கரு -சிறுகதை

 அறை முழுதும் உடைகள் விரவிக் கிடந்தன. போர்வைக்குள் இரு உடல்கள் நேருக்கு நேராக முகம் வைத்து போர்வைக்குள் படுத்திருந்தன. ரமேஷின் கண்கள் பாக்கியாவை வெறித்துப் பார்த்தது. பாக்கியா அவன் மீதிருந்து வரும் ப்பர்பூம் வாசனையை அடிவயிறு வரை நுகர்ந்து கொண்டிருந்தாள். இருவரும் அப்போது தான் எல்லா மேட்டரையும் முடித்து படுத்து இருந்தார்கள்.   "மணி ஆச்சு கிளம்பலையா பாத்திமா ?"   "பாத்தியா ! ஆம்பள புத்திய காட்டுற பாத்தியா" பாத்திமா செல்லமாக அவன் மார்பில் இடித்தாள்.  " அப்டி இல்லடி லேட் ஆச்சில? "  " போறேன் மேட்டர் முடிஞ்சதும் உடனே கழட்டிவிட்டுருல"  " ஹேய் லூசா நீ அப்படி எல்லாம் இல்ல" ரமேஷ் தனது பேண்டை எடுத்து மாட்டிக் கொண்டே பாத்திமாவை பார்த்தான் . அவளுக்கு பெட்டை விட்டு கிளம்ப கூச்சமாயிருந்தது . உடலில் ஒன்றுமே இல்லாமல் உடலுறவுக்கு பிறகு அவளால் எழுந்திருக்க இயலவில்லை. இப்போது ரமேஷ் மீது அவளுக்கு பெரும் கூச்சம் நிலவியது . கிழே கிடந்த பிரிக்கபடாத காண்டம் பாக்கெட்டை எடுத்து பார்த்த ரமேஷ்   "இதை எதுக்கு வாங்குனம்ணு தெரியல யூஸ் பண்ணவே இல்ல"  "டேய...