முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கரு -சிறுகதை

 அறை முழுதும் உடைகள் விரவிக் கிடந்தன. போர்வைக்குள் இரு உடல்கள் நேருக்கு நேராக முகம் வைத்து போர்வைக்குள் படுத்திருந்தன. ரமேஷின் கண்கள் பாக்கியாவை வெறித்துப் பார்த்தது. பாக்கியா அவன் மீதிருந்து வரும் ப்பர்பூம் வாசனையை அடிவயிறு வரை நுகர்ந்து கொண்டிருந்தாள். இருவரும் அப்போது தான் எல்லா மேட்டரையும் முடித்து படுத்து இருந்தார்கள். 

 "மணி ஆச்சு கிளம்பலையா பாத்திமா ?"

  "பாத்தியா ! ஆம்பள புத்திய காட்டுற பாத்தியா" பாத்திமா செல்லமாக அவன் மார்பில் இடித்தாள்.

 " அப்டி இல்லடி லேட் ஆச்சில? " 

" போறேன் மேட்டர் முடிஞ்சதும் உடனே கழட்டிவிட்டுருல" 

" ஹேய் லூசா நீ அப்படி எல்லாம் இல்ல" ரமேஷ் தனது பேண்டை எடுத்து மாட்டிக் கொண்டே பாத்திமாவை பார்த்தான் . அவளுக்கு பெட்டை விட்டு கிளம்ப கூச்சமாயிருந்தது . உடலில் ஒன்றுமே இல்லாமல் உடலுறவுக்கு பிறகு அவளால் எழுந்திருக்க இயலவில்லை. இப்போது ரமேஷ் மீது அவளுக்கு பெரும் கூச்சம் நிலவியது . கிழே கிடந்த பிரிக்கபடாத காண்டம் பாக்கெட்டை எடுத்து பார்த்த ரமேஷ் 

 "இதை எதுக்கு வாங்குனம்ணு தெரியல யூஸ் பண்ணவே இல்ல" 

"டேய்..எனக்கு குழந்தை பிறந்தா உன்ன மாதிரியே இருக்காரு இல்ல ? அப்புறம் அவர் என்ன கொன்னே போடுவார்" 


"ஏண்டி உனக்கு தான் குழந்தை பிறக்காதுல " 

"ஆமா பிரச்சனை அவர் மேல தான் நீ தெளிவா தான இருக்க ?"

 "என்னடி சொல்ற ஆமா அவருடைய உடம்பில தான் பிரச்சனை. இப்ப உன்னோட ஸ்பேம் உள்ளே போச்சுன்னா கரு உண்டாகும்" 

என சாதாரணமாக பாத்திமா சொன்னதும் ரமேஷுக்கு பக்பக்கென அடிக்கத்தொடங்கியது . இருவரும் முகப்புத்தகம் மூலம் பழக்கமானவர்கள் பாத்திமாவிடம் ரமேஷுக்கு ரொம்ப சின்ன வயது. உடல் அளவில் தான் .கணவன் இல்லாத நேரத்தில் பாத்திமா ,ரமேஷ் ரூமுக்கு வருவாள். எப்போதும் பாதுகாப்பாக உறவு வைத்துக் கொள்ளும் ரமேஷ் இன்றைக்கு ஓவர் மூடில் கவனம் சிதறி விட்டான் . உண்மையில் அதுவே அவனுக்கு ஆபத்தாகவும் அமையப்போகிறது . ஒருவேளை பாத்திமா வயிற்றில் குழந்தை நின்று விட்டால் சிக்கல்தான் எனென்றால் பாத்திமா தனது கணவரோடு உடலுறவு வைத்து இதோடு மூன்று வருடங்கள் ஆகப் போகிறது. இந்த பயம் அவனை வாட்டி வதைத்தது . பாத்திமா அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை .

" அப்படி உண்டானால் நான் பார்த்துக் கொள்கிறேன் "என்றும் அவர்களுக்கு குழந்தை இல்லை என சொல்லியும் அவனை ஆறுதல் படுத்தினாள் . 

" பேபி எதும் டெஸ்ட் பண்ணியா? ப்ரியட்ஸ் நின்றிருச்சா? "

 " டேய் லூசு இன்னும் இல்லடா அதுக்கு கொஞ்ச நாள் ஆகும் " " ஒருவேளை குழந்தை பிறந்தா என்ன மாட்டிவிட்டுறுவியாடி ?" " பயந்தாங்கோலி பயப்படாதே நான் பாத்துக்குறேன் நான் தான் குழந்தையை சுமக்க போறேன் அவரு அதெல்லாம் கண்டுக்க மாட்டாரு குழந்தை பிறந்தால் சந்தோஷமம்னு தா நினைப்பார் " "இல்லடி நம்ம இனிமே மேட்டர் பண்ண வேணாம் எனக்கு ஒரு மாதிரி குற்றவுணர்ச்சியா இருக்கு " " தெரியும் டா ஏன் உடம்பு உனக்கு போரடிச்சுப் போச்சில்ல ? "இல்ல ,இந்த குழந்தை மேட்டர் தான் பயமா இருக்கு " "டேய் பொண்ணு நானே பயப்படல அதெல்லாம் பயந்த முடியுமாடா? நான் மேனேஜ் பண்ணிக்கிறேன்" என சொன்னவள் அவனை மடியில் படுக்க வைத்து தலையை கோதிவிட்டாள் . ரமேஷ் பல நாட்களாக அந்த பயத்தில் இருந்து வெளிவந்தவனாயில்லை.ஒரு விதத்தில் பித்து பிடித்த நிலையிலேயே இருந்தான் . இப்போதெல்லாம் அவனுக்கு செக்ஸ் என்ற வார்த்தையே அலர்ஜியாக இருந்தது . பாத்திமா சென்னையை விட்டு சொந்த ஊருக்கு போவதாகவும் சொல்லி இருந்தால் அதுவும் நடந்து விட்டது . ஆனால் ரமேஷுக்கு காமத்தின் மீது மேலும் பயம் தொற்றிகொண்டது .ஒவ்வொரு முறை இந்த சம்பவத்தை பற்றி நினைக்கும் போதெல்லாம் ஒருவித ஜன்னி வந்தவன் போல் இருந்தான் . பாத்திமாவிடம் இருந்து எந்த போனும் மாதக்கணக்கில் வரவில்லை. அவனும் அவ்வளவுதான் குழந்தை நிற்கவில்லை என நினைத்தான் போலிருக்கிறது . காலம் உருண்டோடி விட்டது . ரமேஷ் அதே வீட்டில் தான் குடியிருந்தான். பாத்திமா சென்னைக்கு வரவில்லை ஒரு நாள் மதுரை மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் வைத்து பாத்திமாவை பார்த்தால் அவர் கணவர் கையில் ஒரு குழந்தை இருந்தது. முதலில் பாத்திமா தான் அவனை பார்த்து " டேய் எப்படி இருக்க? ஏங்க என் பிரெண்ட் ரமேஷ்" அவரும் கேஷுவலாக கை கொடுத்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். ரமேஷ் அந்த குழந்தைையின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.பாத்திமா அதனை உன்னிப்பாய் கவனித்தாள்.பிறகு கணவரிடமிருந்து குழந்தையை வாங்க தன் இடுப்பில் வைத்துக்கொண்டு "மாமாடா ,பாரு மாமா பாரு"குழந்தையின் பிஞ்சு விரலை எடுத்து ரமேஷ் நோக்கி நீட்டினாள் . "டேய் இது எங்க குழந்தை ஆயிஷா " என பாத்திமா சொன்னதும் ரமேஷ் சிரித்துக்கொண்டே குழந்தையின் கன்னத்தைக் கிள்ளினான். இருவரும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு பாத்திமா கிளம்பினாள் . குழந்தை பாத்திமாவின் தோலில் இருந்து திரும்பி பார்த்தது .அப்போதுதான் பாப்பாவின் மூக்கு தன்னை போலவே இருக்கிறது என ரமேஷ் உணர்ந்தான்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2024_ஒரு அலசல்

  2024 - இல் நான் மிகப்பெரிய கெஜ புழு..தியாக இருந்தேன். வரும் வருடத்தில் இன்னும் மிகப்பெரிய கெஜ புழு..தியாக மாற போகிறேன். நான் அவ்வொரு ஆண்டு முடியும் போதும் போன வருடத்தை விட இந்த வருடம் சிறப்பாக புழு..தி இருப்பதாக நினைத்து கொள்வதுண்டு. இல்லையென்றால் சில நேரம் என் கீழ்மை குணங்களை அளவிடுவதுண்டு. நான் போன ஆண்டை விட இந்த ஆண்டு எவ்வளவு கீழ்மை குணம் உள்ளவனாக மாறியிருக்கிறேன். எந்த அளவுக்கு என் அல்ப புத்திகள் அரங்கேறியிருக்கிறது என கணக்கிட்டு பார்ப்பேன். நான் ஒரு மகா சோம்பேறி . இலையை போல் தூக்கி ஆற்றில் போட்டால் மிதந்து மிதந்து போவேன். பாறையில் மோதாமல் போகும் சூட்சமும் தெரியும்.என்னை பெரிய பிடுங்கியாக எப்போதும் நினைப்பதில்லை. ஒரு நல்ல இயக்குனரிடம் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது . நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது.  நாம் சாதாரண கடன் கார குடும்பம் என்பதால் சூ..தை கிழிக்கும் சுமை வேறு நம்மை வேட்டையாடுகிறது. எல்லோரையும் போல் நமக்கு எல்லாம் அவ்வளவு இலகுவாக கிடைப்பதில்லை. ஏதோ நெஞ்சில் உரமிருக்க ஓடுகிறோம். உடல் ரீதியாக நிறைய கோளாறுகள் இருக்கிறது. அப்படி பயந்து கொள்ளும் அளவுக்கு ஒன்றுமில்லை தான் பா...

கெடா விருந்து - சிறுகதை

                     கெடா விருந்து    ப ள்ளிக் கூடத்தில் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது . உடனே எங்கள் வகுப்பில் படர்ந்திருந்த சலசலப்பு மெல்ல மடிந்து பெரும் அமைதி நிலவியது . நான் கடைசி பெஞ்சுக்கு முன்பிருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தேன் . எங்கள் வகுப்பில் கடைசி பெஞ்சில் அமர்ந்திருக்கும் ஐந்து மாணவர்கள் மட்டும் அழுக்கு அப்பிய சட்டையை அணிந்திருப்பார்கள் . பொதுவாகவே அரசினர் மாணவர் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களை மட்டும் எங்கள் வகுப்பில் ஒரு மாதிரியாகத்தான் பார்ப்போம் . அவர்களை பார்த்தாலே “ சொறி சிரங்கு பிடிச்சவங்களா ? போய் கடைசி பெஞ்சுல உக்காருங்கடா ?” என சமூக அறிவியல் ஆசிரியர்  துரத்துவார் . எங்கள் வகுப்பிலுள்ள ஐந்து பேரில் கோகுல் மட்டும் நன்றாக படிப்பான் . அவனை பார்த்தால் ஆறாவது படிக்கும் மாணவர்களை போல் அல்லாமல் உயரத்தில் சற்று பெரிய பையனாக இருப்பான் . அவனை வகுப்பில் எல்லோரும் கொக்கு என்று தான் பட்ட பெயர் வைத்து அழைப்பார்கள் . தமிழாசிரியர் கூட அவனை “ இவன பாருங்கடா , மந்த குளத்துல நீந்துர அயிர மீனை கொத்துரவான...

All about 2025

 2025 சொல் வதற்கு இனிய ஆண்டாக இல்லா விட்டாலும் , வாழ்வின் அர்த்தங்களை புதிய பாதையில் எனக்கு உணர்த்திய ஆண்டு. கடந்த ஆண்டு முழுக்க , முழுக்க என்னை இழந்து கொண்டிருந்தேன் என நினைக்கும் போதே ஆச்சரியமாக இருக்கிறது. சுய தெளிவும், சிந்தனையும் அற்று மற்றவர்களின் சொல் பேச்சை கெட்டு கடந்து வந்திருக்கிறேன் என கடைசியாக தான் புரிந்தது.  என் தனி தன்மையை நான் உணர தவறிய இந்த ஆண்டில் நிறைய பாடங்கள் கிடைத்தன. உடல் ரீதியாக நிறைய பலவீனங்களை சந்தித்து வந்த ஆண்டும் கூட.  என்னை மிகவும் நேசிப்பவர்களுக்காக என் ஆசையை கொஞ்சம் இறக்கி வைத்து விட்டு வரலாம் என தோன்றிய ஆண்டு தான் இது. என் வாழ்வில் முதல் முதலாக காதல் உதிர்த்த ஆண்டும் இது தான். அந்த காதலில் கிடைத்த குதூகலமும் மன மகிழ்ச்சியும் சொல்லி அடங்காதவை. ஆனால் எதுவும் நிலையானது அல்ல என இயற்கை எனக்கு மெதுவாக தான் உணர்த்தியது. யார் மீது குறை கூறி எந்த வித பயனும் இல்லை. என்னை நான் மாற்றி கொள்வதில் தான் எல்லா தீர்வும் இருக்கிறது என மெதுவாக தான் புரிய ஆரம்பித்தது. கடந்த ஆண்டில் நேர்ந்த சம்பவங்களும், துயரங்களும் நம்மை இன்னும் வலிமையான மனிதனாக மாற்றும் ...