Jafar panahi இயக்கிய the mirror திரைப்படம் 1997ல் வெளியானது. இந்த படம் ஒரு சிறுமியை முக்கிய கதாப்பாத்திரமாக வைத்து எடுக்கப்பட்டது. கதை ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே குழந்தையின் நடிப்பு பார்பவர்களை கவர்ந்துவிடும். பள்ளி முடித்துவிட்டு வீட்டுக்கு போக அம்மாவுக்காக காத்திருக்கும் சிறுமி,நேரம் ஆகியும் அம்மா வரவில்லை என போன் செய்ய விவரமாக சாலையை கடந்து போகிறது. போன் பூத்தில் ஏறி போன் செய்து அம்மா எடுக்காததால் விரக்தியான பெண்ணை பள்ளி ஆசிரியையின் கணவர் பேருந்து நிறுத்தில் இறக்கி விடுகிறார். அங்கு சில நிமிடங்கள் காத்திருந்தும் அம்மா வந்த பாடில்லை எனவே சிறுமியே ஒரு பஸ்ஸில் ஏறி உட்கார்ந்துகொள்கிறாள். அங்கே ஜோசிய கார பெண்ணோருத்தி பெண்களுக்கு ஜோசியம் பார்ப்பதை
உற்று கவனிக்கிறாள். வண்டி போகும் போது சாலையில் அம்மாவை போல யாரோ தெரிய மீண்டும் பேருந்திலிருந்து இறங்கி அம்மாவை பார்க்க ஓடுகிறாள். ஆனால் அங்கே அவளில்லை. வெறுமையில் மீண்டும் இறங்கிய பஸ்ஸிலே ஏறி பயணிக்கிறாள். பயணத்தில் பெண்கள் தங்களது வாழ்க்கையில் அன்றாடம் சந்திக்கும் வலிகளை பகிர்ந்து கொள்கிறார்கள். காதலர்கள் இருவர் ஸைட் அடிக்கும் காட்சியை பார்த்து சிரிக்கும் அழகு ரசிக்கவைக்கிறது.சரியான நிறுத்ததில் இறங்காமல் கடைசி நிறுத்ததில் இறங்கி அழுகிறாள். பிறகு மீண்டும் இன்னொரு கண்டக்டர் சிறுமியை வண்டியில் ஏற்றி கூட்டிச்செல்லும் போது அவளை பெண்கள் உட்காருக்கும் பகுதிக்கு போ என டிரைவர் துறத்த. சிறுமிகோவப்பட்டு மைக் கொடுத்த காஸ்டும் அனைத்தையும் கழட்டி எரிகிறாள். பிறகு தான் தெரிகிறது இவ்வளவு நேரம் சூட்டிங் நடந்த சமாச்சாரம்.பிறகு படக்குழு சிறுமியை மீண்டும் நடிக்கவைத்து மீதி காட்சியை எப்படி எடுத்தார்கள் என்பதே கதை.
படம் ஆரம்பிக்கும் முதலே இயக்குனர் எப்படி சமுகத்தை கூர்மையாக கவனிக்கிறார். என தெரிகிறது. சிறுமியை பற்றி படமெடுத்தாலும் ஆங்காங்கே பெண் சுதந்திரத்தை பற்றி பேசியிருக்கிறார். ஒருகாட்சியில் சிறுமி டாக்கிசியில் போகும் போது கணவன் மனைவிக்கு இடையேநடக்கும் வாக்கு வாதத்தில் பெண் ஏன் வேலைக்கு செல்ல வேண்டும் என பெண் தைரியமாக பேசும் ஒரு வசனம் வைத்திருப்பார்.சிறுமியாய் இருந்தால் கூட பெண் என்பதால் அவள் எப்படி பிரித்து பார்க்கபடுகிறாள் என விளக்கப்பட்டது அருமை. படம் முழுக்க சவுத் கொரியாவுக்கும், ஈரானுக்கும் இடையே நடக்கும் கால்பந்து போட்டியை பற்றி அப்டேட்டுகளை பரிமாறிக் கொள்கிறார்கள். சிறுமியாக நடத்திருப்பவள் ஒவ்வொரு காட்சியிலும் அழகியலோடு நடித்திருப்பாள். ஈரானில் அத்தனை தடைகளையும் தாண்டி பன்னில் ஊசிக்குத்தி தருவதை போல் நல்ல சமூக கருத்தை எடுத்ததற்காக இயக்குனரை பாராட்டி ஆக வேண்டும்.
--சிபி சரவணன்
கருத்துகள்
கருத்துரையிடுக