ஜனவரி 30, 1948 அன்று இந்திய பூமியின் உன்னத மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட தினம். இந்திய விடுதலைப் போராட்டத்திற்காக தன் வாழ்நாள் முழுவதும் அற்பணித்த மகாத்மாவை ஏன் கொன்றார்கள் ? எதற்கு கொன்றார்கள்? அப்படி சுதந்திரத்தின் மீதான அன்பில் மக்கள் திளைத்துக் கொண்டிருக்கும் போது அவர்களுக்கு மட்டும் ஏன் இந்த வெறுப்பு ? பாகிஸ்தானுக்கான காரணம் இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பிருந்தே இந்து மதத்திற்கும் இஸ்லாமிய மதத்திற்கும் பல மதக்கலவரங்கள் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. இந்துத்துவா அமைப்பின் சார்பில் சிலரும் இஸ்லாமிய அமைப்பின் தலைவரான ஜின்னாவும் நடத்திக்கொண்ட சண்டை கடைசியில் ஜின்னாவை தனிநாடு கேட்க வைத்தது . இந்து மதத்திற்கு முஸ்லிம்களுக்கும் நடைபெற்ற பல மத கலவரங்களில் பலர் மோதிக்கொண்டார்கள். முஸ்லிம்களுக்கு இந்தியாவில் மரியாதை இல்லை என்றும் ,பெரும்பான்மையான இந்துக்கள் வாழும் நாட்டில் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் அவர்கள் தனிநாடு வேண்டினர். இப்போது பங்களாதேசமாக இருக்கும் நாடும் பாகிஸ்தானும் வெள்ளையர்கள...
writter அஞர் நாவல் - வர டீ பதிப்பகம் வெளியீடு https://www.commonfolks.in/books/d/angar