ஜனவரி 30, 1948 அன்று இந்திய பூமியின் உன்னத மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட தினம்.இந்திய விடுதலைப் போராட்டத்திற்காக தன் வாழ்நாள் முழுவதும் அற்பணித்த மகாத்மாவை ஏன் கொன்றார்கள் ? எதற்கு கொன்றார்கள்? அப்படி சுதந்திரத்தின் மீதான அன்பில் மக்கள் திளைத்துக் கொண்டிருக்கும் போது அவர்களுக்கு மட்டும் ஏன் இந்த வெறுப்பு ?
பாகிஸ்தானுக்கான காரணம்
இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பிருந்தே இந்து மதத்திற்கும் இஸ்லாமிய மதத்திற்கும் பல மதக்கலவரங்கள் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. இந்துத்துவா அமைப்பின் சார்பில் சிலரும் இஸ்லாமிய அமைப்பின் தலைவரான ஜின்னாவும் நடத்திக்கொண்ட சண்டை கடைசியில் ஜின்னாவை தனிநாடு கேட்க வைத்தது . இந்து மதத்திற்கு முஸ்லிம்களுக்கும் நடைபெற்ற பல மத கலவரங்களில் பலர் மோதிக்கொண்டார்கள். முஸ்லிம்களுக்கு இந்தியாவில் மரியாதை இல்லை என்றும் ,பெரும்பான்மையான இந்துக்கள் வாழும் நாட்டில் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் அவர்கள் தனிநாடு வேண்டினர். இப்போது பங்களாதேசமாக இருக்கும் நாடும் பாகிஸ்தானும் வெள்ளையர்களால் பிரித்து தரப்பட்டது.
காந்தியின் உண்ணாவிரதம்
இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு காந்தி மகிழ்ச்சி கொள்ளவில்லை. நாடு பிரிந்ததற்காக பெரிதும் வருத்தப்பட்டார் . மேலும் கொல்கத்தா போன்ற பல இடங்களில் மதக்கலவரங்கள் உண்டாகின .அதனால் அவருக்கு இந்த சுதந்திரம் திருப்தியளிக்கவில்லை . ஆகஸ்ட் 15 இல் நள்ளிரவில் சுதந்திரத்திருநாள் அன்று காந்தி எந்தவித கொண்டாட்டத்திலும் ஈடுபடவில்லை.
கொல்கத்தாவில் நடக்கும் கலவரத்திற்க்காக வருத்தப்பட்டார். மேலும் அந்த கலவரத்தை அடக்க வேண்டுமென்று உண்ணாவிரதம் மேற்கொண்டார் பாகிஸ்தான் இந்தியா விட்டு பிரிந்து இருந்தாலும் அது நம் சகோதர நாடு அதுவும் ஒரு வகையில் இந்தியாதான் என பேசினார்.
தன் வாழ்நாள் முடியும் முன்பு எப்படியாவது பாகிஸ்தான் சென்ற அந்த மக்களை கண்டு விட வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்தது. மேலும் நாடு பிரிக்கப்படும் போது பாகிஸ்தானியருக்கு தரப்பட வேண்டிய பணத்தை சரியாக தரவில்லை என ஜின்னா கேட்டிருந்தார். அவர்களுக்காக காந்தி குரல் கொடுத்தது இந்துவா அமைப்புக்கு பிடிக்கவில்லை.அதனால் அன்றைய இந்துத்துவா அமைப்பு காந்தியைக் கொல்ல பல முயற்சிகள் எடுத்தது. இரண்டு மூன்று முறை அதில் தோற்றும் போனது .
கடைசியாக 1948 ஒன்றும் அறியா இளைஞனை கொண்டு காந்தியை கொள்ளத் திட்டமிட்டனர் அன்று எல்லா மக்களும் சமம் என்று போராடிய காந்தியின் இருதயத்தில் துப்பாக்கிக் குண்டுகள் துளைக்கப்பட்டன. கோட்சே எனும் இளைஞனின் கை உயர்ந்தது.அன்னலின் குரல் "ஹே ராம்" என ஒழித்தது.காந்தியை கொன்றுவிட்டு அவன் அங்கயே நின்றான். அது அவரை நாங்கள் தான் கொலை செய்தோம் என சுட்டிக்காட்டுவதற்காக செய்திருக்கலாம்.
காந்தியின் நினைவலைகள் இப்போதைய பாசிசிய அரசுக்கு புரியாது அது அவர்களுக்கு கொண்டாட்டமான தினமாக கூட இருக்கலாம். அவர்மேல் சில வெறுப்பு எதிர்ப்புகள் இருந்தாலும் நாட்டிற்காக தன்னையே அர்ப்பணித்த ஒரு தலைவனை அந்த நாட்டு மக்களால் கொல்லப்படுவது எவ்வளவு பெரிய கொடுமை ? அப்படி மதத்தின் மூலமாக நாட்டை பிரித்துப் போட்டுக்கொண்டிருக்கும் பாஜக அரசு காந்தியை போற்றாவிட்டாலும் என்றும் காந்தியின் நினைவை நாம் போற்றுவோம்.
--சிபி சரவணன்
https://nermai.net/news/7528/22b88a3ee8a94da8261157a4a35f0dcc
கருத்துகள்
கருத்துரையிடுக