"குடிசை வீட்டில் தங்கியிருப்பதை பார்த்து ஏன் இப்படி தங்கியிருக்கிறீர்கள்?? நீங்கள் எவ்வளவு பெரிய தலைவன் என கேட்டிருக்கிறார் காமராசர். என் மக்கள் இப்படி தானே இருக்கிறார்கள்." என ஜீவா பதில் அளித்துள்ளார்.
ஜீவானந்தம் என்றாலே பொதுவுடமை என்று தான் எல்லாரது நியாபகத்திற்கும் வரும் பொதுவுடைமை தாண்டிய அவரது வாழ்க்கை முறை,தன் மக்களை காக்க போராடிய மனப்போக்கு இப்படிஅவரை பற்றி நிறைய விடயங்களை நாம் பேசிக்கொண்டே போகலாம்.ஒரு மனிதனால் அதுவும் ஒரு ஆகசிறந்த தலைவனால் இப்படியெல்லாம் தமிழகத்தில் வாழ முடியுமா?? என்ற கேள்விக்கு பதில் அளித்துப் போனவர் தான் ஜீவானந்தம்.
ஜீவானந்தம் நாகர்கோயிலை அடுத்த பூதப்பாண்டி என்ற ஊரில் கிராமத்தில் 1907ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி, பட்டத்தார் பிள்ளை - உமையம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். பெற்றோர் இட்டபெயர் சொரிமுத்து. ஐயனார் என்ற கிராம தெய்வத்தின் பெயர்தான் சொரிமுத்து.தனது பள்ளிக் காலத்தில் இவர் காந்தியடிகள் மீது அளவற்றப் பற்றுக் கொண்டிருந்தார். அவரது சிறுவயதில் காந்தியும் கதரும் என்ற பெயரில் கவிதையும் எழுதினார்.
சிறு வயதிலேயே குடும்பத்தை விட்டு பிரிந்த தன்னுடைய இளமைகாலத்தில் குருகுலத்தில் ஆசிரியராக பணியாற்றினார்.அப்போது காங்கிரஸ் கட்சியில் இருந்த இவர் தனது நண்பராக ஈ வே ரா பெரியாரை ஏற்றுக்கொண்டார்.பெரியாரின் சுயமரியாதை இயக்கத்திலும் இவருக்கு ஈடுபாடு இருந்தது.சாதிய ஒடுக்கு முறைக்கு எதிராக இவர் நடத்தியப் போராட்டங்களால் கைது செய்யப்பட்டார்.
சிறையில் இருந்த அவர் கம்யூனிச கோட்ப்பாடுகள் கொண்ட நூல்களை வாசிக்கத் துவங்கினார்.அப்போது தான் பகத்சிங் தூக்கிலிடப்பட்டார். இந்த சம்பவம் இவரை மிகவும் பாதித்தது. சிறையில் இருந்து கொண்டே பகத்சிங் எழுதிய நான் ஏன் நாத்திகன் ஆனேன் எனும் நூலை தமிழில் மொழிப்பெயர்த்தார்.இதனை பெரியார் வெளியிட்டார்.சிறை வாசம் முடிந்து வெளிவந்த இவர் ஒரு முழு பொதுவுடைமை வாதியாக மாறினார். அவர் பல தொழிலாளர்கள் புரட்சியில் பங்கு பெற்றார்.தனது வாழ்நாளின் மீதிப்பாதியில் அவர் அரசியலில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்தார்.ஆனால் இவருக்கும் காமராசருக்கும் நல்ல நட்பு இருந்தது. ஒரு முறை ஜீவானந்தம் சரிசெய்த பள்ளி ஒன்றுக்கு திறப்பு விழாவிற்க்கு காமராசர் வந்திருக்கிறார். அப்போது ஜீவானந்ததை சந்திக்க சென்ற முதல்வர், ஜீவா ஒரு குடிசை வீட்டில் தங்கியிருப்பதை பார்த்து
ஏன் இப்படி தங்கியிருக்கிறீர்கள்?? நீங்கள் எவ்வளவு பெரிய தலைவன் என கேட்டிருக்கிறார் காமராசர்.
என் மக்கள் இப்படி தானே இருக்கிறார்கள். என ஜீவா பதில் அளித்துள்ளார்.
பள்ளி திறப்பு விழாவிற்கு அவரை அழைத்துவிட்டு விழாவில் காத்திருக்கிறார். ஆனால் இவர் ஒரு மணிநேரம் தாமதமாக வந்திருக்கிறார்.ஏன் தாமதம் என அவரிடம் கேட்டதற்கு என்னிடம் ஒரு சட்டை தான் உள்ளது அதை துவைத்துக் காய வைத்துப் போட்டுவர நேரம் ஆகிற்று.என பதில் அளித்துள்ளார்.
இப்படி மக்களுக்காகவே தன்னை அற்பணித்து வாழ்ந்து வந்த ஒரு சிறந்த மனிதனை ஒரு கட்சியின் தலைவனாக சித்தரித்து ஒதுக்குவது மிகவும் வேதனை தரக்கூடிய விசயமாக கருதப்படுகிறது.
ஏன் இப்படி தங்கியிருக்கிறீர்கள்?? நீங்கள் எவ்வளவு பெரிய தலைவன் என கேட்டிருக்கிறார் காமராசர்.
என் மக்கள் இப்படி தானே இருக்கிறார்கள். என ஜீவா பதில் அளித்துள்ளார்.
பள்ளி திறப்பு விழாவிற்கு அவரை அழைத்துவிட்டு விழாவில் காத்திருக்கிறார். ஆனால் இவர் ஒரு மணிநேரம் தாமதமாக வந்திருக்கிறார்.ஏன் தாமதம் என அவரிடம் கேட்டதற்கு என்னிடம் ஒரு சட்டை தான் உள்ளது அதை துவைத்துக் காய வைத்துப் போட்டுவர நேரம் ஆகிற்று.என பதில் அளித்துள்ளார்.
இப்படி மக்களுக்காகவே தன்னை அற்பணித்து வாழ்ந்து வந்த ஒரு சிறந்த மனிதனை ஒரு கட்சியின் தலைவனாக சித்தரித்து ஒதுக்குவது மிகவும் வேதனை தரக்கூடிய விசயமாக கருதப்படுகிறது.
https://nermai.net/news/6748/627801d98dd6e952d56df208da0dccff
கருத்துகள்
கருத்துரையிடுக