முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சூபித்துவமும், இசையும்

  


         இஸ்லாமிய மதத்தில் துறவை மேற்கொள்ள விரும்புபவர்களுக்காக உருவாக்கப்பட்டதே   சூபித்துவம் எனப்படுகிறது. ஒரு ஆன்மா தன்னை துறந்து ஒரு இறை நிலையை தேடுவது தான் சூபி என்கிறார்கள். இது எல்லா மதத்திற்க்கும் பொதுவான ஒரு நிலை பாடு தான் . எல்லா மதத்திலும் இது மாதிரியான ஒரு துறவு நிலை சார்ந்த சாத்தியகூறுகள் நிறைய உள்ளன. ஆனால் இஸ்லாமியத்தை பொருத்த வரை எந்த வகை கற்பித்தலும் இல்லாமல் தன்னை இழந்து ஒரு வகை சுயத்தை அடைதல் தான் சூபி ஆவாதற்கான முதல் தகுதியாக கருதப்படுகிறது.

கிரேக்கர்கள் தான் இந்த தத்துவத்தை உருவாக்கினர் என இஸ்லாமியர்கள் பலர் குற்றம் சாட்டுகின்றனர்.பல மதங்களின் நல்லொழுக்கங்களை வகுத்து ஒரு சேர உருவாக்கப்பட்டது சூபிசம் என்பது அவர்கள் கருத்து. ஒரு சூபி தனது வாழ்நாள் முழுதும் தன் ஆசைகளை துறந்து கடவுளை உணருகிற ஒரு நிலையை அடைகிறான்,சூபிகள் பொதுவாக இசை , நடனம் , கவிதைகள் , கதைகள் என பல வழிகளில் இந்த உலகிற்கு பல நல்ல கருத்துகளை போதிக்கின்றனர். பாரசிக நாட்டின் கவிஞரான ரூமி பல கவிதைகள் மூலம் சூபிசத்தை போதிக்கிறார். அவர் கூறமுற்படும் முக்கியமான தத்துவம் நம்மை துறப்பது , நம் மத அடையாளங்கள், எல்லாவற்றையும் துறந்து அன்பால் அனைவரும் இணைய வேண்டும் என்பதை அவை கூறுகின்றன.

சூபி இசை என்பது நம் ஆன்மாவை தொடக்கூடிய ஒரு பேரன்பான இசை. ஒரு இசையோ , கவிதையோ நம் ஆன்மாவோடு உரசி பல உணர்வு கிளர்ச்சிகளை உண்டாக்கிறது என்றால் அது சூபித்துவம் என்கிறார்கள். உண்மையில் கடவுள், வழிபாடு, மதம் இவை அத்தனையும் கடந்து நம் மனதை பாதிக்க கூடிய இசை வடிவம் எதுவாக இருந்தாலும் அவை அடுத்த தலைமுறைக்கு தக்கவடிவில் கொண்டு சேர்க்கப்பட வேண்டும். மனிதனின் ஆன்மாவை தொட்டு உறவாடக்கூடிய ஒரு இசை ஏன் இப்போது கவனிப்பாரற்று போனது. அதற்கு காரணம் மதம் தான். இஸ்லாமிய மதத்திற்கான இசையாக அவை கணிக்கப்படுகிறது, அவை இஸ்லாமியற்க்கானது நாம் கேட்ககூடாது, என்பது போன்ற பல கருத்துகள் நம்மிடம் விரவி உள்ளது . உண்மையில் இப்படிப்பட்ட இசையை  கொண்டாடாமல் இருப்பதற்காக நாம் வெக்கப்பட்டுதான் ஆக வேண்டும்.இந்தியாவின் இசை கலைஞர் ஏ.ஆர். ரகுமான் தன்னால் முடித்த வரை சூபி இசையை சில பாடல்கள் மூலம் பயன்படுத்துகிறார். இன்றும் நாகூர் போன்ற சில முக்கியமான் ஊர்களில் சூபிகள் வாழ்கிறார்கள்.அவர்களின் இசையும் அங்கே பெருமளவில் கேக்கப்பட்டுகொண்டே தான் இருக்கிறது. இசை சாதி மத பேதமன்று மனிதர்களுக்கானது என்பதை நாம் உணர வேண்டும். இசை போதிக்கும் ஒரு உணர்வு தான் முக்கியமானதே ஒழிய அது வந்த மதம் அல்ல என்பதை அறிந்து அவற்றை கேட்டு ரசிப்போம்.

-சிபி சரவணன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2024_ஒரு அலசல்

  2024 - இல் நான் மிகப்பெரிய கெஜ புழு..தியாக இருந்தேன். வரும் வருடத்தில் இன்னும் மிகப்பெரிய கெஜ புழு..தியாக மாற போகிறேன். நான் அவ்வொரு ஆண்டு முடியும் போதும் போன வருடத்தை விட இந்த வருடம் சிறப்பாக புழு..தி இருப்பதாக நினைத்து கொள்வதுண்டு. இல்லையென்றால் சில நேரம் என் கீழ்மை குணங்களை அளவிடுவதுண்டு. நான் போன ஆண்டை விட இந்த ஆண்டு எவ்வளவு கீழ்மை குணம் உள்ளவனாக மாறியிருக்கிறேன். எந்த அளவுக்கு என் அல்ப புத்திகள் அரங்கேறியிருக்கிறது என கணக்கிட்டு பார்ப்பேன். நான் ஒரு மகா சோம்பேறி . இலையை போல் தூக்கி ஆற்றில் போட்டால் மிதந்து மிதந்து போவேன். பாறையில் மோதாமல் போகும் சூட்சமும் தெரியும்.என்னை பெரிய பிடுங்கியாக எப்போதும் நினைப்பதில்லை. ஒரு நல்ல இயக்குனரிடம் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது . நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது.  நாம் சாதாரண கடன் கார குடும்பம் என்பதால் சூ..தை கிழிக்கும் சுமை வேறு நம்மை வேட்டையாடுகிறது. எல்லோரையும் போல் நமக்கு எல்லாம் அவ்வளவு இலகுவாக கிடைப்பதில்லை. ஏதோ நெஞ்சில் உரமிருக்க ஓடுகிறோம். உடல் ரீதியாக நிறைய கோளாறுகள் இருக்கிறது. அப்படி பயந்து கொள்ளும் அளவுக்கு ஒன்றுமில்லை தான் பா...

கெடா விருந்து - சிறுகதை

                     கெடா விருந்து    ப ள்ளிக் கூடத்தில் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது . உடனே எங்கள் வகுப்பில் படர்ந்திருந்த சலசலப்பு மெல்ல மடிந்து பெரும் அமைதி நிலவியது . நான் கடைசி பெஞ்சுக்கு முன்பிருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தேன் . எங்கள் வகுப்பில் கடைசி பெஞ்சில் அமர்ந்திருக்கும் ஐந்து மாணவர்கள் மட்டும் அழுக்கு அப்பிய சட்டையை அணிந்திருப்பார்கள் . பொதுவாகவே அரசினர் மாணவர் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களை மட்டும் எங்கள் வகுப்பில் ஒரு மாதிரியாகத்தான் பார்ப்போம் . அவர்களை பார்த்தாலே “ சொறி சிரங்கு பிடிச்சவங்களா ? போய் கடைசி பெஞ்சுல உக்காருங்கடா ?” என சமூக அறிவியல் ஆசிரியர்  துரத்துவார் . எங்கள் வகுப்பிலுள்ள ஐந்து பேரில் கோகுல் மட்டும் நன்றாக படிப்பான் . அவனை பார்த்தால் ஆறாவது படிக்கும் மாணவர்களை போல் அல்லாமல் உயரத்தில் சற்று பெரிய பையனாக இருப்பான் . அவனை வகுப்பில் எல்லோரும் கொக்கு என்று தான் பட்ட பெயர் வைத்து அழைப்பார்கள் . தமிழாசிரியர் கூட அவனை “ இவன பாருங்கடா , மந்த குளத்துல நீந்துர அயிர மீனை கொத்துரவான...

All about 2025

 2025 சொல் வதற்கு இனிய ஆண்டாக இல்லா விட்டாலும் , வாழ்வின் அர்த்தங்களை புதிய பாதையில் எனக்கு உணர்த்திய ஆண்டு. கடந்த ஆண்டு முழுக்க , முழுக்க என்னை இழந்து கொண்டிருந்தேன் என நினைக்கும் போதே ஆச்சரியமாக இருக்கிறது. சுய தெளிவும், சிந்தனையும் அற்று மற்றவர்களின் சொல் பேச்சை கெட்டு கடந்து வந்திருக்கிறேன் என கடைசியாக தான் புரிந்தது.  என் தனி தன்மையை நான் உணர தவறிய இந்த ஆண்டில் நிறைய பாடங்கள் கிடைத்தன. உடல் ரீதியாக நிறைய பலவீனங்களை சந்தித்து வந்த ஆண்டும் கூட.  என்னை மிகவும் நேசிப்பவர்களுக்காக என் ஆசையை கொஞ்சம் இறக்கி வைத்து விட்டு வரலாம் என தோன்றிய ஆண்டு தான் இது. என் வாழ்வில் முதல் முதலாக காதல் உதிர்த்த ஆண்டும் இது தான். அந்த காதலில் கிடைத்த குதூகலமும் மன மகிழ்ச்சியும் சொல்லி அடங்காதவை. ஆனால் எதுவும் நிலையானது அல்ல என இயற்கை எனக்கு மெதுவாக தான் உணர்த்தியது. யார் மீது குறை கூறி எந்த வித பயனும் இல்லை. என்னை நான் மாற்றி கொள்வதில் தான் எல்லா தீர்வும் இருக்கிறது என மெதுவாக தான் புரிய ஆரம்பித்தது. கடந்த ஆண்டில் நேர்ந்த சம்பவங்களும், துயரங்களும் நம்மை இன்னும் வலிமையான மனிதனாக மாற்றும் ...