“ என்னடி திடீர்னு இப்படி சொல்ற ? “ “அம்மா , நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து எடுத்த முடிவுதாமா… “ “ அடி பாவி மகளே இதுக்காடி உனக்கு செலவு பண்ணி ராணி மாதிரி கட்டி குடுத்தோம். “ இடையில் ரஞ்சனியின் அப்பா “ ராதா சும்மா கத்தாதடி அவளே இப்ப தான் வந்துருக்கா .. அவளை போய் ஏன் டீ திட்டிட்டு இருக்க … போமா… நீ போயி ரெஃப்ரஸ் ஆகிட்டு ரெஸ்ட் எடும்மா நம்ம அப்பறம் பேசுவோம். “ ரஞ்சனி எதுவும் சொல்லிக்கொள்ளாமல் வேகமாக அறைக்குள் சென்று தாழிட்டுக்கொண்டாள். வீடு முழுதும் பெரும் அமைதி.இன்னோரு அறையில் படித்துக் கொண்டிருந்த ரஞ்சனியின் தம்பி தலையை மட்டும் வெளியே நீட்டி எட்டி பார்த்தான். பெற்றோர் இருவரும் முறைத்து பார்த்துக் கொண்டனர். வாசிங் மிஷீன் சத்தம் சற்று அதிகரித்து கத்த துவங்கி வீட்டின் அமைதியை சீர்குலைத்தது. துவைத்த துணியை மொட்ட மாடிக்கு தூக்கி கொண்டு ராதாவால் ஏற முடியவில்லை. முன்பை விட இப்போது அது பயங்கர கனமானதாக இருந்தது. ஒவ்வொரு படிக்கட்டை கடப்பதற்கும் அவள் மிக சிரமப்பட்டாள். “ கல்யாணம் ஆகி இதோடு மூன்று வருடம் ஆகிறது. ஒரு நாள் ...
writter அஞர் நாவல் - வர டீ பதிப்பகம் வெளியீடு https://www.commonfolks.in/books/d/angar