ஏன் பரியேரும் பெருமாள் படத்தில் வந்த பரியனை கொண்டாடியது ஆதிக்க சமூகம் .பரியன் அவர்களிடம் கெஞ்சினான். ஆதிக்க மனோபாவம் உடையவனுக்கு சமூக நீதி கேட்கும் போது கூட கெஞ்ச வேண்டும். அதே கர்ணனாக எதிர்த்து நின்றால் கோவப்பட்டால் அவர்களுக்கு பொறுக்காது. நான் அகிம்சையை நேசிப்பவன் தான். ஆனால் நீ இந்த பூமியில் ஒரு மனுசனை மனிதனே இல்லை நீ வெறும் புழுவுக்கு சமம் எனச் சொல்லும் போது அவனை அதிகார வர்கமே போட்டு மிதிக்கும் போது எப்படி கோபம் வராமல் இருக்கும். எப்படி அந்த புழு நசுக்கும் கால்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வது.ஒரே வழி வன்முறை தான். இதே தான் இலங்கையிலும் நடந்தது. சில சமயம் அகிம்சை மிருக ஜென்மங்களிடம் செல்லுபடி ஆகாது. நீங்கள் செல்லும் பாதையில் ஒரு மரம் சாய்ந்து வழியில் கிடைக்கிறது என வைத்துக் கொள்வோம். அதை உங்களால் எப்படி கடக்க முடியும். அதனிடம் கெஞ்சி மன்றாட முடியாது. பதிலுக்கு கோடாரி எடுத்து தான் ஆக வேண்டும். மரத்தை அப்புறப்படுத்த தான் வேண்டும். அதை தான் கர்ணனும் செய்திருக்கிறார். ஆனால் இந்த படத்தை படிக்காத தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் எப்படி எடுத்து கொள்வார்கள் என்பது தான் கேள்வி?...
writter அஞர் நாவல் - வர டீ பதிப்பகம் வெளியீடு https://www.commonfolks.in/books/d/angar