முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அஞர் நாவல்

 அணிந்துரை

இலக்கிய வகைமையில் எனக்குப் பிடித்ததாக நான் நம்பியது கவிதைகளை தான் பிறகு அது எனக்கேற்ற வகைமையில்லை என்றுணரவே பத்தாண்டுகள் தேவைப்பட்டது. புதிதாக ஒரு புதினத்தை கண்டால் எனக்கு ஒரு புதிய உலகுகினுள் நுழைகிற உணர்வே ஏற்படுகிறது. ஒரு நல்ல புதினம் நம் மேல் ஒரு பிடித்த உடை போல உடலோடு ஒன்றிணைந்துவிடுகிறது. சில புதினங்கள் மனதோடு…அந்த வகையில் “அஞர்” என்னை கலங்க வைத்துவிட்டது.
தமிழில் புதினமென்ற வடிவில் நிறைய எழுதப்பட்டிருக்கிறது ஆனால் அவையெல்லாம் புதினங்களா என்று கேட்டால் நான் நிச்சயம் சில கணங்களாவது பதிலற்று திகைத்து நிற்பேன். “அஞர்” ஒரு சிறந்த புதினம் இதை சாதித்த சிபி சரவணனுக்கு நம் வாழ்த்துக்கள்.
தென்மேற்கின் வட்டார மொழியுடன் அந்த நிலத்தின் அழகை கதையோடு பேசுவது உணர்ச்சிமிக்க இந்த நாவலின் மிகப்பெரிய பலம். இந்த புதினத்தை வாசித்து முடித்தவுடன் துயரில் நெஞ்சு அடைத்துக்கொண்டு கண் கலங்கிய பொழுதில் இப்படி தோன்றியது.
“பிறகு அங்கிருந்து அத்தனையும் காணாமல் போயிருந்தது. ஆனால் அங்கு கொஞ்சம் வெதுவெதுப்பான தூய காதல் மட்டும் தேங்கியிருந்தது. அது இன்னும் ஆவியாகமலும், அழிந்து போகாமலும் அப்படியே அதே உயிர்ப்புடன் ததும்பியபடி…”
மேற்கு மலைத்தொடர்ச்சியின் அடிவாரத்தில் உள்ள சமவெளியின் வட்டார மொழி, கட்டிட தொழிலாளிகளின் உளவியல், மண்வாசனை, மலைக்கு மேலே உள்ள நிலம் குறித்த கடந்தகால அரசியல், ஏலக்காயின் மணம், அங்கு நிலவும் வாழ்வியல் கட்டமைப்பு, காதல், சாதி, ஆணாதிக்க மற்றும் சாதிய முரண்பாடுகளென மிக யதார்த்தமாக பேசுகிற புதினம். ஊர் பெண், காலனி பையன் காதலிக்கிறார்கள் என்று தெரிந்து சாதி நோயர்கள் அந்த பையனை சித்திரவதை செய்து சிதைத்துக் கொல்கிறார்கள் அது ஊருக்கே தெரிந்திருக்கிறது ஆனால் போலீசுக்கு தெரிந்திருக்கவில்லை இப்படி ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொரு ஊரிலும் கொல்லப்படுகிறார்கள் அந்த கொடூர சித்திரவதை கொலையை போகிறப்போக்கில் நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார்.
சடையாண்டி சொல்கிறான் தன் அன்புக்குரியவளிடம் “இந்த வாய்க்கா, இந்த மண்ணு, வயக்காடு, வானம், காக்கா, குருவிக, சாட்சியா சொல்றேன். நீ தான் எனக்கு ராணி, நான் தான் உனக்கு ராசா, இதுகதான் அதுக்கு சாட்சி இதுகளுக்கு உண்மையா நாம பிழைப்போம். மனுச பய மனசு பீ மனசு, நாளாக நாளாக நாறிக்கிட்டே தான் போகும். நான் உன் மேல வச்சிருக்கற பாசம் இந்த மண்ணுக்கு சமானம்” என்கிற உரையாடலும், காதல் பிரபஞ்சத்தின் கடைசி நம்பிக்கை என்ற வரியும் இந்த நாவலின் நியாயமாக இருக்கிறது.
காதலை பேச வேண்டும், அதன் வழியே சமூக நிலைகளை பேச வேண்டும், அதை உண்மையாக பேச வேண்டும், எழுத்தின் வழியே அதை அழகு குலையாமல் வடிக்க வேண்டும் என்கிற ஒழுங்கையெல்லாம் இந்த புதினத்தில் சிறப்பாக நிகழ்த்தப்பட்டிருக்கிறது. தன்னவளின் மீதான அநீதியான சந்தேகத்துக்கு பெயர் ராமன் என்று சொல்லக்கூடிய அளவு நுட்பமான வடிவெழுத்து.
வடிவான ஒரு எளியவள் இந்நிலத்தில் எவ்வளவு பாதுகாப்பற்றிருக்கிறாள் என்கிற அவலத்தை மிக அப்பட்டமாக பேசுகிற வேறொரு நாவலை நான் இதுவரை வாசித்ததில்லை. மனித மிருகங்களின் இந்த பண்பற்ற மனநிலைக்கு காரணம் என்ன என்கிற புறச்சூழலையோ, அகச்சூழலையோ புதினம் பேசாமல் யதார்த்தத்தில் ஒரு பெண் ஆண்களின் எண்ணத்தில் என்னவாக உணரப்படுகிறாள் அது அவளுக்கு எத்தனைப்பெரிய ஆபத்துகளை உருவாக்குகிறது என்பதை மிகச் செப்பமாக பேசுகிற புதினம். எளிய மக்கள் பிழைப்பின் பொருட்டான பாடுகளை, தங்கள் உழைப்பின் களைப்பில், காதலின் கனிவில் எப்படி துய்கிறார்கள் என்று மிக இயல்பாக பேசுகிற ஒரு புதினம். தென் மேற்கு மலைத்தொடருக்கு அடியிலிருக்கும் சமவெளி வாழ்க்கை, மொழி, சாதிய நிலைப்பாடு அதை மீறி மனிதர்களுக்கிடையில் நிகழும் காதல் அதன் கொடூரமான விளைவுகள் என…
காதல் கனியின் இனிப்பும், இந்நிலத்தில் அது தரும் துயரைக் காட்டும் அழகிய சித்திரம்.
- கரன் கார்க்கி
எழுத்தாளர்

நூலை பெற தொடர்புக்கு: 9543339081
நூல் விலை - ரூ 150


அமேசான் லிங்க்: Angnar - Tamil novel
https://amzn.eu/d/guH7Qjj

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2024_ஒரு அலசல்

  2024 - இல் நான் மிகப்பெரிய கெஜ புழு..தியாக இருந்தேன். வரும் வருடத்தில் இன்னும் மிகப்பெரிய கெஜ புழு..தியாக மாற போகிறேன். நான் அவ்வொரு ஆண்டு முடியும் போதும் போன வருடத்தை விட இந்த வருடம் சிறப்பாக புழு..தி இருப்பதாக நினைத்து கொள்வதுண்டு. இல்லையென்றால் சில நேரம் என் கீழ்மை குணங்களை அளவிடுவதுண்டு. நான் போன ஆண்டை விட இந்த ஆண்டு எவ்வளவு கீழ்மை குணம் உள்ளவனாக மாறியிருக்கிறேன். எந்த அளவுக்கு என் அல்ப புத்திகள் அரங்கேறியிருக்கிறது என கணக்கிட்டு பார்ப்பேன். நான் ஒரு மகா சோம்பேறி . இலையை போல் தூக்கி ஆற்றில் போட்டால் மிதந்து மிதந்து போவேன். பாறையில் மோதாமல் போகும் சூட்சமும் தெரியும்.என்னை பெரிய பிடுங்கியாக எப்போதும் நினைப்பதில்லை. ஒரு நல்ல இயக்குனரிடம் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது . நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது.  நாம் சாதாரண கடன் கார குடும்பம் என்பதால் சூ..தை கிழிக்கும் சுமை வேறு நம்மை வேட்டையாடுகிறது. எல்லோரையும் போல் நமக்கு எல்லாம் அவ்வளவு இலகுவாக கிடைப்பதில்லை. ஏதோ நெஞ்சில் உரமிருக்க ஓடுகிறோம். உடல் ரீதியாக நிறைய கோளாறுகள் இருக்கிறது. அப்படி பயந்து கொள்ளும் அளவுக்கு ஒன்றுமில்லை தான் பா...

கெடா விருந்து - சிறுகதை

                     கெடா விருந்து    ப ள்ளிக் கூடத்தில் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது . உடனே எங்கள் வகுப்பில் படர்ந்திருந்த சலசலப்பு மெல்ல மடிந்து பெரும் அமைதி நிலவியது . நான் கடைசி பெஞ்சுக்கு முன்பிருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தேன் . எங்கள் வகுப்பில் கடைசி பெஞ்சில் அமர்ந்திருக்கும் ஐந்து மாணவர்கள் மட்டும் அழுக்கு அப்பிய சட்டையை அணிந்திருப்பார்கள் . பொதுவாகவே அரசினர் மாணவர் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களை மட்டும் எங்கள் வகுப்பில் ஒரு மாதிரியாகத்தான் பார்ப்போம் . அவர்களை பார்த்தாலே “ சொறி சிரங்கு பிடிச்சவங்களா ? போய் கடைசி பெஞ்சுல உக்காருங்கடா ?” என சமூக அறிவியல் ஆசிரியர்  துரத்துவார் . எங்கள் வகுப்பிலுள்ள ஐந்து பேரில் கோகுல் மட்டும் நன்றாக படிப்பான் . அவனை பார்த்தால் ஆறாவது படிக்கும் மாணவர்களை போல் அல்லாமல் உயரத்தில் சற்று பெரிய பையனாக இருப்பான் . அவனை வகுப்பில் எல்லோரும் கொக்கு என்று தான் பட்ட பெயர் வைத்து அழைப்பார்கள் . தமிழாசிரியர் கூட அவனை “ இவன பாருங்கடா , மந்த குளத்துல நீந்துர அயிர மீனை கொத்துரவான...

All about 2025

 2025 சொல் வதற்கு இனிய ஆண்டாக இல்லா விட்டாலும் , வாழ்வின் அர்த்தங்களை புதிய பாதையில் எனக்கு உணர்த்திய ஆண்டு. கடந்த ஆண்டு முழுக்க , முழுக்க என்னை இழந்து கொண்டிருந்தேன் என நினைக்கும் போதே ஆச்சரியமாக இருக்கிறது. சுய தெளிவும், சிந்தனையும் அற்று மற்றவர்களின் சொல் பேச்சை கெட்டு கடந்து வந்திருக்கிறேன் என கடைசியாக தான் புரிந்தது.  என் தனி தன்மையை நான் உணர தவறிய இந்த ஆண்டில் நிறைய பாடங்கள் கிடைத்தன. உடல் ரீதியாக நிறைய பலவீனங்களை சந்தித்து வந்த ஆண்டும் கூட.  என்னை மிகவும் நேசிப்பவர்களுக்காக என் ஆசையை கொஞ்சம் இறக்கி வைத்து விட்டு வரலாம் என தோன்றிய ஆண்டு தான் இது. என் வாழ்வில் முதல் முதலாக காதல் உதிர்த்த ஆண்டும் இது தான். அந்த காதலில் கிடைத்த குதூகலமும் மன மகிழ்ச்சியும் சொல்லி அடங்காதவை. ஆனால் எதுவும் நிலையானது அல்ல என இயற்கை எனக்கு மெதுவாக தான் உணர்த்தியது. யார் மீது குறை கூறி எந்த வித பயனும் இல்லை. என்னை நான் மாற்றி கொள்வதில் தான் எல்லா தீர்வும் இருக்கிறது என மெதுவாக தான் புரிய ஆரம்பித்தது. கடந்த ஆண்டில் நேர்ந்த சம்பவங்களும், துயரங்களும் நம்மை இன்னும் வலிமையான மனிதனாக மாற்றும் ...