ஏன் பரியேரும் பெருமாள் படத்தில் வந்த பரியனை கொண்டாடியது ஆதிக்க சமூகம் .பரியன் அவர்களிடம் கெஞ்சினான். ஆதிக்க மனோபாவம் உடையவனுக்கு சமூக நீதி கேட்கும் போது கூட கெஞ்ச வேண்டும். அதே கர்ணனாக எதிர்த்து நின்றால் கோவப்பட்டால் அவர்களுக்கு பொறுக்காது. நான் அகிம்சையை நேசிப்பவன் தான். ஆனால் நீ இந்த பூமியில் ஒரு மனுசனை மனிதனே இல்லை நீ வெறும் புழுவுக்கு சமம் எனச் சொல்லும் போது அவனை அதிகார வர்கமே போட்டு மிதிக்கும் போது எப்படி கோபம் வராமல் இருக்கும். எப்படி அந்த புழு நசுக்கும் கால்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வது.ஒரே வழி வன்முறை தான். இதே தான் இலங்கையிலும் நடந்தது. சில சமயம் அகிம்சை மிருக ஜென்மங்களிடம் செல்லுபடி ஆகாது. நீங்கள் செல்லும் பாதையில் ஒரு மரம் சாய்ந்து வழியில் கிடைக்கிறது என வைத்துக் கொள்வோம். அதை உங்களால் எப்படி கடக்க முடியும். அதனிடம் கெஞ்சி மன்றாட முடியாது. பதிலுக்கு கோடாரி எடுத்து தான் ஆக வேண்டும். மரத்தை அப்புறப்படுத்த தான் வேண்டும். அதை தான் கர்ணனும் செய்திருக்கிறார். ஆனால் இந்த படத்தை படிக்காத தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் எப்படி எடுத்து கொள்வார்கள் என்பது தான் கேள்வி?
சரி அந்த குறியீடுகளை பற்றி நிறைய பேசலாம்.ஆனால் அதை அவர் அவர் பார்வைக்கு புரிந்து கொள்வது தான் புத்திசாலித்தனம். படம் பார்த்து அழுகாத மனுசன் மனுசனாக இருக்க முடியாது. சில சமயம் சில இடங்களை சினிமாவை டெரண்டினோ ஸ்டையிலில் "Voilance is fun to watch " என எடுத்துக் கொண்டு கடந்து விட வேண்டியதான். தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவெல்லாம் வார்த்தைகளே இல்லை. மாரி செல்வராஜின் எழுத்தே படத்தின் மொத்த பலம். சிறு தெய்வ வழிபாட்டை பற்றி புரிதலை எளிய மக்கள் தங்கள் குடும்பத்தில் இழந்த ஒருத்தரை கடவுளாக்குவார்கள். அது தான் அந்த சிறுதெய்வ வேடத்தில் மாயையாக வரும் சிறுமி . பண்பாட்டு வாழ்வியலை பிரதிபலிப்பதில் உள்ள தெளிவு மெய்சிலிர்க்க வைக்கிறது. இத்தனைக்கும் ஊடாக இசையை வைத்து நம்மை அழவைக்கிறார் சந்தோஷ் நாராயணன். படத்தொகுப்பு அல்டிமேட் செய்கை. சினிமா தொழில்நுட்பத்தில் படம் உச்சகட்ட பாடப்புத்தகம். ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு படிப்பினை. கர்ணன் தருபவனல்ல கேட்பவன்....
படத்தின் கருத்துக்கள் காண்போரை பிரம்மிக்க வைத்துள்ளன. சாதிய பாகுபாடுகளை தெளிவாக உணர்த்தும் அற்புத படைப்பு.
பதிலளிநீக்குhttps://ekathavu.com/2021/06/karnan_sathya/
பதிலளிநீக்கு