முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சுடும் ரத்தம்- சிறுகதை

                                        அ டுக்குமாடி குடியிருப்புகளை உரசிய வெயில் காலையை அறிமுகப்படுத்தியது .    சித்தனின் கால்கள் வெயிலை   உணர்ந்திருக்க   கூடும் அதன் மனதை ஒளியூட்டும் பிரபஞ்சத்தை ஓட விட்டுப் பார்த்தான் .   வெளியே மக்கும் குப்பை மக்கா குப்பை   என   பாடல் ஒலிக்க எப்போதும் போல இன்றும் அவன்   சுகாதார   துறையால் விழித்தான் .   தினமும் அந்த பாடலை   கேட்டு   கேட்டு மனம் பழக்கமாகிவிட்டது .   அவனது அறை கொஞ்சம் வசதியான அறை தான் என்றாலும் கூட சுத்தத்தைப் பற்றி   என்னவென   கேட்கும் நிலையில் தான் வைத்திருந்தான் .   சோம்பலை முறித்தவன் எழுந்து பல் துலக்கிக் கொண்டே ஜன்னல்    திரைகளை விளக்கிப் பார்த்தான் .   வாகனங்கள்   அவசர கதியில்   ஊர்ந்து கொண்டிருந்தன .    முன்னாள் செல்லும் வண்டி போக வழி இல்லாமல் நின்றிருந்தாலும் , ஹாரன்   ஓசை மட்டும் ஓயவில்லை .  ...